states

பொறியியல் கலந்தாய்வு: இன்று வெளியாகிறது ரேண்டம் எண்

சென்னை,ஜூன் 5- பொறியியல் படிப்புகளில் சேர  விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் செவ்வாயன்று (ஜூன்6) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி கள், அண்ணா பல்கலைக் கழகம்  மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்,  சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பி.இ.,  பி.டெக்., பி.ஆர்க்., பட்டப் படிப்பு களில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கியது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 4 ஆம் தேதி யுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் இதுவரை 1,87,693 பேர் இந்தாண்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்வதற் கான ரேண்டம் எண்  செவ்வாயன்று(ஜூன் 6) வெளி யாகிறது. ஒவ்வொரு மாணவர்க ளுக்கும் ரேண்டம் எண் உருவாக் கப்படும் அதை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக ‘கட்ஆப்’ பெறும்  மாணவர்களில் யாருக்கு முன்னு ரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி களில் இளநிலை படிப்புகளுக்கு 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்துள் ளனர். இவர்களில் பொறியியல் படிப்புகளுக்கு கடந்தாண்டை விட  16,810 பேர் இந்தாண்டு கூடுதலாக  விண்ணப்பித்துள்ளனர். விளை யாட்டு பிரிவை தவிரப் பிற பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியாக சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.