states

ராமஜெயம் கொலை வழக்கு 2-வது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு

சென்னை, ஜூன் 10-  ராமஜெயம் கொலை வழக்கில் 2-ஆவது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சரு மான கே.என்.நேருவின் தம்பி ராம ஜெயம், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச்  29-ஆம் தேதி அதிகாலை நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணை யர் சைலேஷ் குமார் யாதவ் தலைமை யில், 12 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. சிபிசிஐடி விசாரணையில் சரி வர துப்பு கிடைக்காததால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.  இதனிடையே ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வும் உத்தரவிடப்பட்டது. இதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகி யோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.  இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதி சீதாராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் 2வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால் அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சீதாராமன் 4 வார கால அவகாசம் வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.