மும்பை, நவ. 18 - மகாராஷ்டிர மாநிலத்தில் தனது நடைப்பய ணத்தைத் தொடர்ந்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்க்கரை விமர்சித்திருந்தார். “பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தவர்தான் சாவர்க்கர். பிரிட்டிஷார் தயவில் விடுதலையாகி அவர்களிடமே ஓய்வூதியம் பெற்று வாழ்ந்தவர்” என்று குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சால் ஆர்எஸ்எஸ் - பாஜக வட்டாரங்கள் கொந்தளித்தன. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூப்பாடு போட்ட னர். “ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் பாராமல், வீர சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து இழிவாகப் பேசி வருகிறார். ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் நான் புகார் அளிக்க உள்ளேன்” என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கரும் களத்தில் குதித்தார். இதனிடையே, அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற நடைப்பயணத்திற்கு இடையே ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் மீதான தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தை ஊடகங்கள் முன்பு எடுத்துக் காட்டிய ராகுல்காந்தி, “உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்” என்று கடிதத்தின் கடைசி வரியில் சாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல் காந்தி படித்து காட்டினார்.
மேலும், “நான் சாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள் ளேன். பயம் காரணமாகத்தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம்” என்று கூறியதுடன், “சிலர் (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு) எனது நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடை பயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்” என்றும் ராகுல் காந்தி சவால் விடுத்தார். ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு இதனிடையே, வி.டி. சாவர்க்கர் குறித்து இழிவான முறையில் கருத்துகள் கூறியதாக ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் ஐபிசி 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தெரி வித்திருந்த கருத்து உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்திவிட்டது என்று பாலாசாஹேப் பாஞ்சி சிவசேனா பிரமுகர் வந்தனா டோங்ரே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில், சாவர்க்கர் குறித்த பேச்சுக்காக ராகுல் காந்திக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.