சண்டிகர், ஜன.17- “என் தலையை துண்டாக வெட்டி எடுத் தாலும், ஒருபோதும், தான் ஆர்எஸ்எஸ் அலு வலகத்திற்கு செல்ல மாட்டேன்” என காங்கி ரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தில் பாரத் ஜோடா யாத் திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலை யில், செவ்வாயன்று அவர் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, “வருண் காந்தி காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறதே..?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “வருண் காந்தியை அண்ணன் என்ற முறை யில் கட்டி அணைப்பேன். ஆனால், ஒரு போதும் அவர் ஏற்றுக்கொண்ட சித்தாந் தத்தை நான் ஏற்க மாட்டேன். வருண் காந்தி பாஜகவில் இருக்கிறார். அவர் இங்கு வந் தால் அவருக்குத்தான் பிரச்சனை. எனது சித் தந்தமும், அவரது சித்தாந்தமும் ஒன் றுக்கொன்று முரணானது.
அவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நானோ, என் தலையை துண்டாக வெட்டி எடுத்தாலும், ஆர்எஸ்எஸ் அலுவல கத்திற்கு செல்ல மாட்டேன். எனது குடும் பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அந்த சித் தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான சித் தாந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர் வருண் காந்தி. அந்த சிந்தாந்தத்தை அவர் உள்வாங்கிக் கொண்டார். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல வரு டங்களுக்கு முன்பு ஒருமுறை இதுபற்றி வருண் காந்தியிடம் பேசியிருக்கிறேன். அப்போது வருண் காந்தி, ஆர்எஸ்எஸ் நல்ல பணிகளை செய்து வருகிறது என என்னிடம் கூறினார். அப்போது நான், “நமது குடும்பம் எந்த கொள்கைக்காக நின்றுக் கொண்டிருக்கிறது என்பது உனக்கு தெரிந்தி ருந்தும், அதை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று எடுத்துரைத்தேன்” என்று கூறி யுள்ளார்.