புதுதில்லி, ஜூன் 5- இந்தியப் பணமும், இந்தியாவு க்கு வரும் எண்ணெய்யும் மட்டும் தான் ரஷ்யப் போருக்கு நிதியளிக்கி றதா? என ஒன்றிய அமைச்சர் ஜெய் சங்கர் கேள்வியெழுப்பியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியாவின் தலைநகர் பிராடிஸ் வாலாவில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அமைச்சரிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: ஈரான் மற்றும் வெனிசுலா எண்ணெய் மீதான தடைகளை அமெ ரிக்கா நீக்க மறுக்கிறதே என்ற கேள்வி க்கு, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்குவதை சிலர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியப் பணமும், இந்தியாவுக்கு வரும் எண்ணெய்யும் மட்டும்தான் ரஷ்யப் போருக்கு நிதியளிக்கிறதா?. மேலும் ரஷ்யாவிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட எரிபொருளை வேறு சிலருக்கு இந்தியா பரிமாற்றம் செய்ததாக வெளியான செய்தியை யும் மறுத்தார். இந்நிலையில், இந்தியா - சீனா இடையேயான பிரச்சனை அதிகரித் தால், இதுபோன்ற சவாலை இந்தியா எதிர்கொள்ள வேண்டியி ருக்கும்? என்ற கேள்விக்கு, இந்தி யா-சீனா எல்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நீடிக்கின்றன. சீனாவுடனான பிரச்சனை அதிகரித் தால், சர்வதேச நாடுகளின் ஆதரவை இந்தியா இழக்கக் கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுவது தவறானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சனையை உலகப் பிரச்சனையா கப் பார்க்கின்றன. அதேசமயம் உல கப் பிரச்சனையை தங்கள் பிரச்சனை யாகக் கருதுவதில்லை. இந்த எண் ணத்தை, மனோபாவத்தை அந்த நாடு கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ளும்போது ஐரோப்பிய நாடுகள் அமைதியாகக் கடந்துவிடுகின்றன. உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. உக்ரைனின் புக்கா நகரில் படுகொலைகள் நிகழ்த்தப் பட்டபோது, இந்தியா கடும் கண்ட னம் தெரிவித்தது. மேலும், படு கொலைகள் தொடர்பாக விசா ரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் மதில் மேல் பூனையாக இருக்கவில்லை. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியா, அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. சொல்லப்போனால் உலகில் உள்ள பல்வேறு சவாலான விஷயங்களு க்கு பதில் இந்தியாவில் இருந்து தான் கிடைத்துள்ளது.