states

கொள்முதல் நெல் மூட்டைகள் நேரடியாக அரவைக்கு கொண்டு செல்லப்படும்

சென்னை,ஏப்.13- கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழை யில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு உள்ள தாக அமைச்சர் சக்கரபாணி கூறி னார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் புதன்கிழமை(ஏப்.13) கேள்வி நேரத்திற்கு பேசிய எதிர்க்  கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி,“  தற்போது பெய்து வரும் கோடை மழையின் காரண மாக பல மாவட்டங்களில் விவசா யிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் நனைந்து வீணாகும் நிலையில் இருக்கிறது. குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரண மாக மயிலாடுதுறை,

சீர்காழி  மற்றும் அதன் சுற்றுப்பகுதி களில் உள்ள 170 மையங்களில் கொள்முதல் செய்து வைக்கப் பட்டிருந்த 70 ஆயிரம் நெல்  மூட்டைகள் நனைந்து நாசமாகி விட்டன. இதேபோல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந் தான், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசின் கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம்” என்றார். பெரியகுளம் பகுதியில் வெற்றிலை சாகுபடியும் சேத மடைந்துள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்க ளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் நெல்  மூட்டைகள் சேமிப்பு கிடங்கு களில் பத்திரப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க  வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

இதற்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் அர. சக்கர பாணி, “கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகளை மழை யில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. மேலும், சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் 51 சேமிப்பு கிடங்குகளிலும், 166 திறந்தவெளி சேமிப்பு  கிடங்குகளில் பாதுகாக்கப்படு கிறது” என்றார். நேரடி கொள் முதல் நிலை யங்களில் கொள் முதல் செய்யப் படும் நெல்மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் வைக்காமல் இனி நேரடியாக அரவைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.