சென்னை,மே 5- இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு: இந்து சமய அறநிலையத்துறையில், உதவி ஆணையர் பதவியிலிருந்து பதவி உயர்வின் மூலம், துணை ஆணையர் பத விக்கு நியமனம் செய்வதற்கு 2021-22ஆம் ஆண்டுக்கான காலி பணியிட மதிப்பீடு 30 (முப்பது) என அரசாணையில் நிர்ண யிக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையரது செயற்குறிப்பு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தின்படி ஆளுநருக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்து சமய அறநிலையத்துறையில் 2021-22ஆம் ஆண்டுக்கு, ‘‘உதவி ஆணையர்” பதவியி லிருந்து பதவி உயர்வின் மூலம் ‘துணை ஆணையராக நியமிப்பதற்கான தற்காலிக பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட த்தில் விலக்களித்து தமிழக ஆளுநரால் ஆணையிடப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கு துணை ஆணையர் பதவிக்கான தற்காலிக பெயர் பட்டியலில் முன்னுரிமை வரிசைப்படி எஸ்.ஞானசேகரன், வே.குமரேசன், எஸ். சிவராம்குமார், ஜெ.பரணிதரன், வா.ஆனந்த், பெ.ரமேஷ், செ.மாரியப்பன், ச.கிருஷ்ணன், ஜெ.முல்லை, ஜெயப் பிரியா, ஜோதி, வே.சபர்மதி, பெ.க. வனிதா, க.ரமணி, இரா.பிரகாஷ், து.ரத்தின வேல்பாண்டியன், விஜயா, அருணாசலம், ஜான்சிராணி, க.ராமு, இரா.மேனகா, எம்.சூரியநாராயணன், ந.சுரேஷ், டி.சிவலிங்கம், எஸ்.வி.ஹர்சினி, ஆர்.ஹரி ஹரன், எஸ்.சுப்பிரமணியம், உமாதேவி, எஸ்.வெங்கடேஷ், எம்.ராமசாமி ஆகிய உதவி ஆணையர்களுக்கு துணை ஆணை யர்களாக பதவி உயர்வு அளிக்கப்படு கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.