தஞ்சாவூர்,நவ.9- நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட் டில் மட்டும் ரூ. 1 லட்சத்து 38 ஆயி ரத்து 820 கோடி வருமான வரி வசூ லிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது என்று வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி.வசந்தன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் மத்திய கூட்டு றவு வங்கிக்குட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலா ளர்களுக்கு வருமான வரித்துறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் வருமான வரித்துறை ஆணையர் டி.வசந்தன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “வருமான வரித்துறை கடந்த 2023-24 நிதி யாண்டில் இந்தியா முழுவதும் ரூ.19 லட்சத்து 60 ஆயிரத்து 166 கோடி வசூல் செய்துள்ளது. அதில் தமிழ கத்தின் பங்கு 6 சதவீதமாகும். நடப்பு நிதியாண்டிற்கு 2024-25 இந்தியா முழுவதும் ரூ.22 லட்சத்து 7 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 820 கோடி அளவிற்கு வருமானவரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அகில இந்திய அளவில் 6.28 சதவீத மாகும். மதுரை மண்டலத்தின் கீழ் தமி ழகத்தில் உள்ள 19 மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை யும் இணைத்து 20 மாவட்டங்களில், நடப்பாண்டில் ரூ.3 ஆயிரத்து 944 கோடியை வருமான வரியாக வசூ லிக்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது தமிழக அளவில் 2.84 சதவீதமாகும்,” என்று தெரி வித்தார்.