சென்னை, ஜூலை 26- மாணவர்கள் எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப் படக்கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி செவ்வாயன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையில் சிறு எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய சீக்கிய மக்கள் இங்கு சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆற்றிய கல்வி பணி என்பது பெரும்பான்மையைவிட மகத்தானதாக அமைந்திருக்கிறது. அனைவரும் சரிசமம் என்பதை நினை வில் வைத்து, அனைவரும் படிக்கக் கூடிய வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது”என்றார். அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கின்ற போது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழி லாக, வர்த்தகமாக பார்க்காமல் தொண்டாக கல்வி சேவையாக கருத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் பட்டங்கள் வாங்கு வதற்காக மட்டும் கல்வி நிறுவனங்க ளுக்கு வரவில்லை. முதலில் தன்னம் பிக்கை, தைரியம், மன உறுதியை கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவர்கள் வளர வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படக் கூடிய தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி அதற்குரிய தண்டனையை நிச்ச யமாகப் பெற்றுத்தரும். எந்த சூழலிலும் மாணவிகள் தற்கொலை எண்ணத் திற்கு தள்ளப்படக்கூடாது என்றார். தமிழ்நாடு மாணவர்கள் அறிவுக் கூர்மை கொண்டவர்களாக மட்டும் இல்லாமல், உடல் உறுதியும் மன உறுதி யும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்து விடுவது இல்லை. பாடம் நடத்துவதோடு, ஆசிரியர்களின் பணியும் முடிந்துவிடுவது இல்லை. குழந்தையைப் பெற்றதோடு, பெற்றோரின் பணி எப்படி முடியாதோ அதுபோல, ஆசிரியர் பணியும் முடிந்துவிடாது. மாணவச் செல்வங் களே தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற் றோராக இருந்தாலும் மாணவ, மாணவி களிடம் மனம் விட்டு பேசுங்கள். மாணவர்களும் உங்கள் பிரச்சனை களையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்துகொள்ளுங் கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.