states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் ஆய்வு

பெங்களுரு,ஏப்.9- கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாது காப்பு வன சரணாலயத்தை பிரதமர் மோடி  ஞாயிறன்று பார்வையிட்டார்.  பின்னர், பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணா லயத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்தடைந்தார்.  இதையடுத்து பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  நிகழ்ச்சியில் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு எண்ணிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். நாட்டில் உள்ள  புலிகளை பாதுகாக்க புலிகள் திட்டம் (Project Tiger) என்ற பெயரில் தொடக்கப் பட்ட திட்டம் 50 ஆம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் நாட்டில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.   அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 167 புலிகள் உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க 1973 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ‘புலிகள் திட்டத்தை’ (Project Tiger) தொடங்கியது. அப்போது முதல் புலிகளை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல்  கொண்டுசென்ற ரூ.5 கோடி பறிமுதல்

பெங்களுரு, ஏப்.9- கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில்  உள்ளன. இந்நிலையில் ஹெப்பகோடி பகுதி,  வீரசந்திரா சிக்னல் அருகே சோதனைச்சாவடி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம். இயந்தி ரங்களில் பணம் நிரப்புவதற்காக, 3 வேன் களில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடியே 75 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.  தேர்தல் விதிகள்படி ரிசர்வ் வங்கியின்  ஸ்கேன் விவரம், பணம் கொண்டு செல் லப்படும் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில், பணம் கொண்டு  சென்ற 3 வாகனங்களிலும் ஸ்கேனர் ஒட்டப்படாத நிலையில், பணத்தை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உயர்  அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ரூ.1.13 லட்சம் கோடி வரி செலுத்திய மூத்த குடிமக்கள்

புதுதில்லி,ஏப்.9- மூத்த குடிமக்கள் ரூ.1.13 லட்சம் கோடி வருமான வரி செலுத்தியுள்ளனர்.  2022-23 நிதி ஆண்டில் தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும் நிறுவன வரி வசூல் 17 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் முதல் 11 மாதங்களில் மட்டும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த  குடிமக்கள் மூலமாக ரூ.1.13 லட்சம் கோடி வரி வசூ லாகியுள்ளது. இது 2021-22 நிதி ஆண்டில் வசூலானதை விட 35.5 சதவீதம் அதிகம். 2021-22 நிதி ஆண்டில் மூத்த குடிமக்கள் மூலம் ரூ.83,756 கோடி வரி வசூலானது.இது கொரோனா காலத்திற்கு முந்தைய அளவை விட 61 சதவீதம் அதிகம் ஆகும் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரியில்  கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு

புதுச்சேரி, ஏப். 9- புதுச்சேரியில் மீண்டும் கொரோனா தொற்று மிரட்டத் துவங்கியுள்ளது. அங்கு புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதுவையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. இதனையடுத்து சுகாதாரத் துறையும் கொரோனா பரிசோதனை களை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுவை மாநிலத்தில் 827 கொரோனா பரி சோதனைகள் செய்யப் பட்டன. இதில் புதுவையில் 55 பேர், காரைக் காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாஹே யில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒரு வரும், கோரிமேடு மார்பக மருத்துவ மனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சயைில் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. புதுவையில் கடந்த சில தினங்க ளாக கொரோனா படிப்படியாக அதி கரித்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் யாரும் முகக்கவசம் அணிவதை அரசு தரப்பில் கண்டுகொள்ளாத போக்கும் நிலவுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்

சென்னை, ஏப். 9- கிழக்கு திசை காற்றின் வேகமாறு பாடு காரணமாக, தென் மற்றும் வட தமிழ்நாட்டில்  நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேகமாறு பாடு காரணமாக, 9-ம் தேதி தென் தமிழ்நாட்டில் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். 10ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  வரை பெய்யக்கூடும்.அதிக பட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

 போலி மருத்துவர் கைது

விழுப்புரம், ஏப்.9- விழுப்புரம் மாவட்டம், விக்கி ரவாண்டி அருகே பெரியதச்சூரில் போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்  விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வ சேகர் (வயது 51) என்று தெரியவந்துள்ளது. இவர் போலி மருத்துவர் என்ற புகார் வரவே விக்கிரவாண்டி அரசு மருத்து வமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் நேரில் விசாரித்த போது இது தெரியவந்தது. விசாரணையில்  அவர் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பி.எஸ்.சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. தனி மருந்த கம் ஒன்றையும் அவர் நடத்திவந்தது தெரியவந்ததது.  இதையடுத்து ரகு நாத் அளித்த புகாரின்பேரில் செல்வசேகரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.

1 முதல் 3-ம் வகுப்பு வரை ஆன்லைன், ஆப்லைன் முறையில் தேர்வு மதிப்பீடு

சென்னை, ஏப்.9-  தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘‘எண்ணும், எழுத்தும்’’ என்ற திட்  டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதன்படி, நடப்பு ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் மதிப்பீட்டுத் தேர்வை ஆன் லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கள் ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெறு கிறது.  இதில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு, மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் கைபேசியில் இருந்து தேர்வெழுத ஆன்லைன் மூலம்  நடத்தப்படும். இதில் பாடங்கள் கவ னித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் தமிழ் மற்றும் ஆங்கி லத்தில் சோதிக்கப்படும்.  இந்தக் கேள்விகள் அனைத்தும் ஒருவரி கேள்விகளாக இருக்கும். ஆசிரி யர்கள் ‘‘எண்ணும் எழுத்தும்’’ செயலி  மூலம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பும் கேள்விகளை மாணவர்களிடம் கேட் பார்கள். அவர்களின் பதிலை அதில் பதிவு செய்வார்கள்.  இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் எண்ணும், எழுத்தும் திட்ட புத்தகத்திலிருந்து மட்டுமே இடம் பெறும். பாடப் புத்தகத்தில் இருக்கும் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது. நான்  காம் வகுப்பு முதல் பாடப் புத்தகங்க ளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.  மேலும் 40 மதிப்பெண்களுக்கு வளர்  அறி மதிப்பீடு என இருவகையாகப் பிரித்து ஆன்லைன் மற்றும் ஆப் லைனில் தேர்வு நடத்தி மதிப்பீடு செய்ய  அறிவுறுத்தியுள்ளனர். இதில் குழந்தை களின் விளையாட்டு திறன், வாசிப்பு திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய் யப்படும்.

விருதுநகர் சந்தை: வத்தல், பாமாயில், நல்லெண்ணெய்  விலை உயர்வு

விருதுநகர், ஏப்,9- விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. கடந்த வாரம் 15 கிலோ நல்லெண் ணெய் விலை ரூ.6435க்கு விற்கப்பட்டது. இந்த வாரம்  திடீரென டின் ஒன்றுக்கு ரூ.165  உயர்ந்து, தற்போது 6600க்கு விற்பனை யாகிறது. பாமாயிலானது அதிகளவில் இறக்கு மதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் உள்நாட்டிலும் பாமாயில் விளைச் சல் அதிகரித்து வருகிறது, ஆனால் பாமா யில் விலையானது கடந்த சில வாரங்களாக ஏறு முகத்திலேயே உள்ளது. கடந்த வாரம்  15 கிலோ பாமாயில் விலையானது ரூ. 1510க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.60  உயர்ந்து ரூ.1575க்கு விற்பனை செய்யப் படுகிறது. கடலை எண்ணெய் : கடந்தவாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ. 3100க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.50 குறைவு ஏற்பட்டு தற்போது டின் ஒன்று ரூ.3050க்கு விற்கப்படுகிறது. பருப்பு வகைகள் கடந்த வாரம் வர லாறு காணாத வகையில் உச்சபட்ச  விலை யை தொட்ட நிலையில், இந்த வாரம் துவரம்  பருப்பு புதுஸ் லையன் வகை கடந்த வாரத்தை விட மூட்டை ஒன்றுக்கு ரூ. 200 மட்டும் குறைந்து தற்போது ரூ.11800க்கு  விற்கப்படுகிறது. இதேபோல் பட்டாணி பருப்பின் விலை யும் கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்து  மூட்டை ஒன்று ரூ.5700க்கு விற்பனை யாகிறது. கடந்த வாரம் 40 கிலோ மல்லி லையன் ரூ,3200க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ,200 மட்டும் குறைந்துள்ளது.எனவே. ரூ,3000 முதல் 3200 வரை விற்கப்படுகிறது. மேலும் 100 கிலோ கடலை புண்ணாக்கு  விலையானது கடந்த வாரம் ரூ.5400க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ. 100 உயர்ந்து ரூ,5500க்கும் எள் புண்ணாக்  கின் விலை கடந்த வாரத்தை விட ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.2500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட் களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.