states

வாகன சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியது மோடி அரசு!

புதுதில்லி, ஏப். 2 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி வரும் மோடி அரசு, அடுத்ததாக வாகனப் பதிவு மற்றும் சான்றிதழ் புதுப்பிப்பிற்கான கட்டணங்களையும் 3 முதல் 10 மடங்கு அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வை, ஏப்ரல் 1 முதலே அமலுக்கும் கொண்டு வந்துள்ளது. 15 வருடங்களுக்கு மேலான கார் களை வைத்திருப்பவர்கள் வாகனப் பதிவு சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு முன்பு 600 ரூபாய் கட்டணம் வசூ லிக்கப்பட்டு வந்தது. அது புதிய கட்டண விகிதங்களின் படி, தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  இருசக்கர வாகனங்களுக்கான வாகனப் பதிவு சான்றிதழுக்கான கட்ட ணமும் 300 ரூபாயிலிருந்து இருந்து 1,000 ரூபாயாகவும், ஆட்டோக்களுக் கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 2 ஆயி ரத்து 500 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும், இறக்குமதி செய்யப் பட்ட கார்களுக்கான கட்டணம் 5 ஆயி ரம் ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாயாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் முடிந்து, அதைப் புதுப்பிக்கும் வரை யிலான ஒவ்வொரு நாட்களுக்குமான அபராதக் கட்டணமும்,  50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  15 வருடங்களுக்கு மேலான வணிக ரீதியான வாகனங்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேலான வாகனங் களுக்கான பதிவுச் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புப் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வாகன ஓட்டிகள்,  ஆட்டோ டிரைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து, கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.