அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல ஆன்லைன் வாகன விற்பனை நிறுவனமான விரூம் (Vroom) தனது மொத்த பணியாளர்களில் 11% பேரை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு அமெரிக்க ஆன்லைன் வாகன விற்பனை நிறுவனமான ஷிப்ட் (Shift) 30% ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. விரூம், ஷிப்ட் ஆகிய இரு நிறுவனங்களும் அமெரிக்கா வில் ‘பயன்படுத்திய கார்’ விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பிரம்மாண்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பியுள்ள ஜூராங் விண்கலம் அங்கு நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, புதிய தகவலை அனுப்பியுள்ளது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் முதல்வர் பூபேந்திர படேல் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மூத்த அதிகாரி ஒருவர் தூங்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் 2-வது நாளிலேயே உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ஒய்எஸ்ஆர்டிபி தலை வரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியு மான ஒய்.எஸ்.ஷர்மிளா கம்மம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிப் போம் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 1406 வாக்கு களில் 1107வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், திங்களன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாத் தளங்களுக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை நாளான ஞாயிறன்று மட்டும் ஒரே நாளில் 25,000-க்கும் அதிகமான பார்வை யாளர்கள் வருகை தந்தனர்.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மது அருந்தி யதற்காக 300 காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா.
உள்நாட்டு கலவரம் நடைபெற்று வரும் சூடானில் மேலும் 72 மணிநேர சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி யுள்ளது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த லக்சயா குமார் (11 வயது) எனும் சிறுவன், நீலாங்கரை - மெரினா இடையே உள்ள 15 கிமீ தூரத்தை வெறும் 3.18 மணி நேரத்தில் நீந்தி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடாததால் சூடானில் இருந்து வந்த 117 இந்தியர்களை தனிமைப்படுத்த ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவு.