states

img

பூம்புகார் கடலுக்கு அடியில் பழைய துறைமுக நகரம்

பாரதிதாசன் பல்கலைக் கழக அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத் துறையின் தொலை உணர்வு பிரிவு நடத்திய ஆராய்ச்சி யில், தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகர்  கடற்கரை யிலிருந்து சுமார் 30-40 கி.மீ. தொலை வில் பழைய துறைமுக நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நகரம் மிகப்பெரிய துறைமுகம், கலங்கரை விளக்கம்,  கப்பல்தளம் மற்றும் குடியிருப்புகளு டன் சுமார் 250 சதுர கி.மீட்டர் வரை  இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடல்களின் செயற்கைக்கோள் பொது அடி அளவீடு விளக்கப்படம் (GEBCO) மற்றும் பல்ஒளிக்கோடுகள் எதிரொலி ஆழமானி தரவுகள்(MBES) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த  ஆராய்ச்சியில், வங்காள விரிகுடா வின் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை யிலான கடலோரப் பகுதிகள் இங்கு காணப்பட்டன.

சென்னையிலுள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்  மூலம் இந்த எம்பிஎஸ்இ தரவுகள் சேக ரிப்பட்டன. கடந்த கால, கடல் மட்ட அளவைக்  கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பூம்புகார் நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது அல்ல  என்றும், இது சுமார் 15 ஆயிரம் ஆண்டு கள் பழமையானது என்பதும் தெரிய வருகிறது. உலகத்திலேயே மிகப் பழ மையான துறைமுக நகரங்களில் ஒன்  றாக இது இருந்திருக்கலாம் என பூம்பு கார் ஆராய்ச்சித் திட்டத்தின் தேசிய  ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியரு மான எஸ்.எம்.ராமசாமி தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி யதாவது: “காவேரிபூம்பட்டினம் என பெயர் கொண்ட பூம்புகார் நகர், கடலில் மூழ்கியதற்கான சான்றுகள் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இருக்கின்றன. துறைமுக நகரம் காணாமல் போனது  ஒரு மர்மமாகவே இருந்தது. அறி வியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  உதவியுடன், பூம்புகார் நகரின் வர லாற்றை நவீன முறையில் மறுகட்ட மைப்பதற்காக 2019-இல் முதற்கட்ட  நிதியாக ரூ.8.90 கோடி ஒதுக்கப்பட் டது.

கடல்களின் செயற்கைக்கோள் பொது அடி அளவீடு விளக்கப்படத்தின் (GEBCO) தரவுகள் மூலம் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, கடலில்  40 கி.மீ. வரை உள்ள காவிரியின் மூன்று  டெல்டாக்களை காட்டியது. பல்ஒளிக் கோடுகள் எதிரொலி ஆழமானி தரவு கள்(MBES) ஆராய்ச்சியில் முக்கிய கட லோர நிலங்களுடன், மணல்கரைகள்,  உப்பங்கழிகள், ஆறுகள், கடற்கரை யோரங்கள், முகத்துவாரங்கள் மற்றும் பழைய கரைகோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும், அறிவியல்ரீதியாக வடிவ மைக்கப்பட்ட, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய சுமார் 11 கி.மீ நீளமும் மற் றும் 2.5 கி.மீ அகலமும் கொண்ட பரந்த துறைமுகம் மற்றும் பல கால்  வாய்கள் இருப்பதாக நாங்கள் அனு மானிக்கிறோம். இதற்கிடையில், வணி கத்திற்கு பயன்படுத்தப்பட்ட அகன்ற  மேசைப்பகுதி ஒன்றும் இருந்திருக்கி றது.

கிழக்குப் பகுதி துறைமுகத்தில், படுக்கை வசதி கொண்ட கப்பல்களுக் காக சுமார் 70-80 தளங்கள் வடக்கு-தெற்கு திசையை நோக்கி 30 கி.மீ. வரை இருந்தன. வடக்குப் பகுதியில்  4 ச.கி.மீட்டரில் சுற்றுச்சுவருடன் பல குடியிருப்புகள் இருந்துள்ளன. துறை முகத்திலிருந்து 10 கி.மீ. தொலை விலான வடக்கு திசையில், சுழற்படி கட்டுகளைக் கொண்ட கலங்கரை விளக்கம் இருந்ததை நினைவுத் தூண்  சின்னங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆழமான நதிகளின் வெட்டுப்  பள்ளத்தாக்குகள், நீர்மூழ்கிக் கப்பல் கள் போன்ற பல்வேறு புவியியல் அம்சங்கள் நிறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. வெள்ளம், சுனாமி,  கடல் மட்டம் உயர்வு மற்றும் புயல்  உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால்  பூம்புகார் நகரம் பாதிக்கப்பட்டிருக்க லாம். இத்தகைய சீற்றங்களால் அழிந்த துறைமுக நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டு, இடமாற்றம் செய்  யப்பட்டிருக்கிறது. இதன் ஏழாவது மறு  மேம்பாட்டு பணிகள் 2500 ஆண்டு களுக்கு முன்பு நடந்திருக்கலாம். பின்  னர், 1020 ஆண்டுகளுக்கு முந்தைய கடல்மட்ட உயர்வு காரணமாக, மீண் டும் நீரில் மூழ்கியிருக்கலாம்.  ஆராய்ச்சியின் போது கடலுக்கடி யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் உண்மை என்பதை உறுதிப்படுத்து கின்றன. இது தொடர்பான திட்டம் ஓராண்டுக்குள் முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எம்.செல்வம் செய்தியாளர்களிடம் கூறு கையில், “தமிழ்நாட்டின் பழைய துறை முக நகர வரலாறு குறித்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை விட, அதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு தொழில்நுட்பம் மிகவும்  உதவியது. துறைகள் மற்றும் நிறு வனங்களுக்கு இடையேயான இந்த  ஆராய்ச்சித் திட்டத்தில் 12 நிறுவனங் கள் பங்கு பெற்றுள்ளன” என்றார்.