states

ரவுடி மூலம் மிரட்டி மதம் மாற்ற முயன்றதாக பாதிரியார்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு!

பெங்களூரு, நவ. 18 - ரவுடியை வைத்து மிரட்டி மதமாற்றம் செய்ய முயன்றதாக, கர்நாடகத்தில் பாதிரி யார்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹுப் பள்ளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “ஹுப்பள்ளியை சேர்ந்த கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் வெவ்வேறு  மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்துவந்த நிலையில் அண்மையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம்  செய்துகொண்டனர். அதன்பின் இரு வருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கார்த்தி நவம்பர் 16 அன்று எங்களிடம் புகார்  ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி ஷீலா தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறு மாறு வற்புறுத்துவதாகவும், இல்லை யென்றால் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உள்ளூர் ரவுடி மதன் புகுடி என்பவரை வைத்து சில கிறிஸ்தவ மிஷனரிகள் தன்னை மதம் மாறச் சொல்லி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார். அதனடிப்படையில், ரவுடி மதன் புகுடி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.”  இவ்வாறு ஹூப்பள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஷிக்கலிகாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் ஹுப்பள்ளி காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில கிறிஸ்தவ மிஷனரிகள் இந்து மதத்தைச் சேர்ந்த ஷிக்கலிகாரா சமூகத்தை குறிவைத்து ஒட்டுமொத்தமாக மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவ தாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.