states

img

தேசபக்தராக இருங்கள், தேசியவாதியாக அல்ல

சி.எச்.கணாரன் நகர் (கண்ணூர்), ஏப். 9- தேசபக்தராக இருக்க பாடுபட வேண்டும், தேசியவாதியாக இருக்கக் கூடாது என்று கவிஞரும், கேரள சாகித்ய அகாடமியின் தலைவரு மான சச்சிதானந்தன் கூறினார். தேசி யவாதம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசபக்தி என்பது மக்களுக்கான வாழ்க்கையை அர்ப்ப ணிப்பதாகும். ரவீந்திரநாத் தாகூர் கூட தேசியவாதத்தை ஏற்கவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டை யொட்டி கண்ணூரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கலாச்சார மாநாட்டை  அவர் வெள்ளியன்று (ஏப்.8) தொ டங்கி வைத்து உரையாற்றுகையில், அரசியல் இல்லை என்று கூறு வோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு கூறுவோர் பிற்போக்கு அரசியலுக்கு அவர்களை அறியாமலேயே பலியாகின்றனர். அரசியல் உண்டெனவும் அது மனித குலத்தின் விடுதலை, மதச்சார் பின்மைக்கு ஆதரவானது என்பதை யும் பிரகடனப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியா முழுவதையும் அச்சம் பீடித்துள்ளது. அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லத் தயங்கி தங்களை அடிமைப்படுத்துவது ஆபத்தானது. ஜனநாய கம் என்பது தேர்தல்களால் தீர்மா னிக்கப்படுவதில்லை. இரண்டு தேர் தல்களுக்கு இடையில் நாட்டு மக்களு க்கு என்ன நடக்கிறது என்பதன் மூலம் ஜனநாயகத்தின் பலம் அளவிடப் படுகிறது. தற்போது நாடாளு மன்றத்தில் ஒலிப்பது மக்களின் குரல் அல்ல. மதத்தை அதிகாரத்துக்கான ஒரு வன்முறை ஆயுதமாக மாற்றுவதல்ல ஆன்மீகம். கலாச்சாரம் என்று கேட்டால் துப்பாக்கி தூக்க நினைப் போரின் ஆட்சிக்கு உட்பட்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். ஊடகங்களுக்கு கூட எல்லை களை கடந்து விமர்சிக்க உரிமை இல்லை. இந்த அச்சத்தின் காரண மாகவே பெரும்பான்மையான ஊட கங்கள் ஆளுங்கட்சியின் பிரச்சார கர்களாக மாறினர்.இவ்வாறு சச்சிதா னந்தன் பேசினார்.