states

ஜூன் 23 இல் டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் போராட்டம்

சென்னை,ஜூன் 4- பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முறைகேடான பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் சார்பில் ஜூன் 23 அன்று  டாஸ்மாக் மண்டல அலு வலகங்கள்  முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து   டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக்குழுவின் சார்பில் கே. திருச்செல்வன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் மே 31  அன்று சென்னையில் (சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில்) கு.பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. டாஸ்மாக் மதுபான கடை ஊழி யர்களின் நீண்டகால கோரிக்கை களான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட சட்டப்படியான, நியாயமான கோரிக்கைகள் சட்ட மன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு க்கு மாறாக தொகுப்பூதியத்தில் சிறு உயர்வு மட்டும்  அளித்துள்ளதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரி வித்துக்கொள்கிறது.

டாஸ்மாக் கடைகளில் அதிக விற்பனையாகும் கடைகளில் குறை வான எண்ணிக்கையிலும், விற்பனை குறைவான கடைகளில் அதிக எண்ணிக்கையிலும் ஊழியர்கள் உள்ளதை கணக்கில் கொண்டு விற்ப னை அடிப்படையில் பணிநிரவல் செய்திட வேண்டுமென தொழிற்சங்கங் கள் முன்வைத்த கோரிக்கை நிரா கரிக்கப்பட்டு ஆளுங்கட்சியினர், பார்  உரிமையாளர்கள், துறை அமைச்சர் அலுவலக சிபாரிசு பேரில் மட்டும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன.  இந்த முறைகேடான பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்து வெளிப் படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும்.  டாஸ்மாக் தலைமையிடத்தில் பொதுமேலாளர் (தொழிலாளர் நலன்) பணியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிரப்படா மல் உள்ளதால் ஒழுங்கு நடவடிக்கை கள் என்ற பெயரால் நூற்றுக்கணக் கான ஊழியர்கள் மீதான தற்காலிக பணியிடை நீக்கம், கிடங்கு பணி உள்ளிட்ட தண்டனைகளை முடி வுக்கு கொண்டு வர முடியாத நிலை  உள்ளதை கருத்தில் கொண்டு தமி ழக அரசு உடனடியாக தொழிலாளர் நலனக்கான பொதுமேலாளர்  பணி யிடத்தை பூர்த்தி செய்யவும், நீண்ட காலமாக பணிமறுக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக கடை பணி வழங்க வேண்டும். 

மாநிலம் முழுவதும் 5400க்கும்  மேற்பட்ட டாஸ்மாக் கடைகளோடு இணைந்த பார்களில் 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட  பார்கள் உரிமம் பெறா மல் துறை அமைச்சர் ஆதரவாளர்கள்  நடத்துவதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.  அரசுக்கு வருவாய் இழப்பையும் பொருட்படுத்தாமல் அமைச்சரது ஆதரவாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  அரசு மதுபானக் கடைகளுக்கு அரு கில்  மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கிளப்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு ள்ளது. இந்த கிளப்கள் தங்களுடைய கிளப் உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யாமல், பொதுமக்களுக்கும் மது விற்பனை செய்கின்றன.  தனிநபர்களுக்கு வரு வாய் ஏற்படுத்தும் வகையிலும், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் புதிய உரிமங்கள் வழ ங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், டாஸ்மாக் நிர் வாகத்திற்கு போட்டியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நபரை நியமித்து ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது, பணியிட மாறுதல் செய்வது, கடையை மூடு வது  போன்ற அத்துமீறலில்  ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். முறையற்ற பணியிடமாறு தல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும்.  துறை அமைச்சரின் ஆதர வாளருக்கு ஒத்துப்போகாத ஊழியர்களை பணியிடமாற்றம் செய்திருப்பதை ரத்து செய்யவும்,  தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான  சம்பளப் பிடித்தம், பணியிடமாறுதல் உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கை களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஜூன் 23 அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.