சென்னை,மே 6- சனாதன தர்மமே பாரத தர்மம் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சுக்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: சென்னை அருகே சம்பூர்ண பாரத மாதா கோயில் விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருக் கிறார். அப்போது அவர் பாகிஸ்தான் பிரிவினை பற்றி மிகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒன்றுபட்ட இந்தியா மத அடிப்படை யில் இரண்டுபட்டதற்கான மூல காரணமே இந்து மகா சபையும், ஆர்எஸ்எஸ்சும்தான் என்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நினைவுப் படுத்துகிறது.
அந்த அமைப்புகளது சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோரே மத அடிப்படையில்தான் ஒரு நாடு இருக்க முடியும் என்று சொல்லி, “இந்தியா இந்துக்களுக்கான நாடே” என்று பிரிவினை விதையை முதலில் விதைத் தார்கள். பிறகு ஜின்னாவின் முஸ்லிம் லீக் அதைப் பிடித்துக் கொண்டது. இன்றும்கூட தனது லட்சியம் “இந்து ராஷ்டிரம்” அமைப்பதே என்கிறது.ஆர்எஸ்எஸ். இப்படி இந்தியர்களை மத அடிப்படையில் பிளக்கிற வேலையைச் செய்கிறவர்கள் பிரி வினை பற்றி கண்ணீர் விடுவது மோசடி நாடகம். இந்த நாடகத்தின் தொடர்ச்சியாக “அகண்ட பாரதம்” அமைக்கப் போவ தாகவும் ஓங்கியடித்திருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர். இவர்களது அகண்ட பாரதம் நாடுகளுக்கிடை யேயான நல்லுறவை, பரஸ்பர அங்கீகாரத்தை அஸ்திவாரமாகக் கொண்டதல்ல. மாறாக ஆதிக்கத்தை ஆதாரமாகக் கொண்டது. இது பக்கத்து நாடுகளைப் பயமுறுத்தும் வேலை. இதன் விளைவாக இந்தப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகும்.
அது இந்தியாவுக்கும், ஏற்கனவே தள்ளாடித் தவிக்கும் நமது பொரு ளாதாரத்திற்கும் பெரும் கேட்டை விளைவிக்கக் கூடியது. எனவே ஆர்எஸ்எஸ்சின் இந்த அபாய கர அகண்ட பாரத லட்சியத்தை ஆதரிக்க வேண்டாம் என்று மக்களை மேடை வலியுறுத்தி கேட்டுக் கொள்கி றது. ஆர்எஸ்எஸ்சின் இந்து ராஷ்டிர மும்சரி, அகண்ட பாரதமும்சரி அனைத்து இந்துக்களுக்கானதும் அல்ல, அவை சனாதனிகளுக் கானவை, மநுவாதிகளுக்கானவை என்பதை மேடை சுட்டி வந்திருக்கிறது. அதை ஒருவிதமாக ஒப்புக் கொண் டுள்ளார் மோகன் பகவத். “உலகில் அனைத்து பிறப்புகளும் தர்மத்தின் அடிப்படையில் அமைந்தது. சனாதன தர்மம்தான் உலகை வழி நடத்தும் என மகரிஷி அரவிந்தர் கூறி யுள்ளார். இந்த தர்மத்தை நிலை நிறுத்த உருவானதுதான் பாரதம்” (இந்து தமிழ் திசை 5-5-23) என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இவர் கூறும் சனாதன தர்மம் வருணா சிரமமே, மனு தர்மமே என்பதில் சந்தே கம் வேண்டாம். பிறப்புகள் பற்றிப் பேசுவதிலிருந்தே அதை உணரலாம். இவரின் அகண்ட பாரதத்தில் மக்கள் சாதியால் பிளவுபடுத்தப்பட்டு கொடூர மாக ஒடுக்கப்படுவார்கள், பெண்கள் அடிமை நிலைக்குத்தள்ளப் படுவார்கள். மொத்தத்தில் இந்தியா பலநூறு ஆண்டு காலத்திற்கு பின் னோக்கித் தள்ளப்படும் என்று மேடை எச்சரிக்கிறது. நாட்டை பிற்போக்கு படுகுழிக் குள் தள்ளும் நாசகரக் கருத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் முன்வைப்பதை மேடை வன்மையாகக் கண்டிப்ப தோடு, இவரின் சதி வலையில் சிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.