புதுதில்லி, மே 3- ஜிஎஸ்டி வரி வசூல், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயி ரம் கோடி ரூபாயாக உயர்ந்துள் ளது. 2022-23 நிதியாண்டின் முதல் மாதம் ஏப்ரல் ஆகும். இந்த முதல் மாதத்திலேயே, ஜிஎஸ்டி வரி வசூல், 2017 முதல் இதுவரை இல்லாத உச் சத்தைத் தொட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதம் என்ற பெயரில், 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (Goods and Services Tax - GST) வரியை, ஒன்றிய பாஜக அரசு அறி முகம் செய்தது. இதன்கீழ் சராசரி யாக ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கே வரி வருவாய் கிடைத்து வந்தது. 2020-21 நிதியாண்டில் ஜிஎஸ்டி வாயிலாக சுமார் ரூ. 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி வசூலாகி இருந்தது. 2021-22 நிதியாண்டில்தான் சற்று அதிகரித்து சுமார் ரூ. 14 லட்சத்து 87 ஆயிரம் கோடி வசூலாகி இருந் தது. இந்நிலையில், 2022-23 நிதியாண் டின் முதல் (ஏப்ரல்) மாதத்தில், இது வரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் ஜிஎஸ்டி வாயிலான வசூல் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி. இதில் ஒன்றிய அரசுக்கான ஜிஎஸ்டி ரூ. 33 ஆயிரத்து 159 கோடி. மாநி லங்களுக்கான ஜிஎஸ்டி ரூ. 41 ஆயி ரத்து 793 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி- இறக்குமதி பொருட் கள் மீதான வரி வசூல் ரூ. 36 ஆயி ரத்து 705 கோடியையும் சேர்த்து ரூ. 81 ஆயிரத்து 939 கோடி. அதே போல செஸ் வரி - இறக்குமதி பொருட் கள் மீதான வரி ரூ. 857 கோடியை யும் சேர்த்து ரூ. 10 ஆயிரத்து 649 கோடி.