states

தாம்பரம்- செங்கோட்டை ரயில் ஜூன் 1 ஆம் தேதி முதல் துவக்கம்

ரயில் நேரத்தை மாற்ற பயணிகள் கோரிக்கை 

  தாம்பரம் - செங்கோட்டை புதிய ரயில் செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் வகையிலும் காலை 9 மணிக்குள் செங்கோட்டை  சென்றடையும் வகையிலும் காலஅட்டவணையை மாற்றவேண்டும் என்று தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.   சென்னைக்கு நிரந்தர ரயில்களே இல்லாத நெல்லை-தென்காசி வழித்தடத்தில் சென்னைக்கு நிரந்தர ரயில் கிடைத்தது மகிழ்ச்சி. மேலும் கடையத்தில் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை-நெல்லை இடையே முன்பதிவுக்கு பொதுக் கோட்டா வழங்க வேண்டும்.   5 தூங்கும் வசதி பெட்டிகளும், 7 குளிர்சாதன பெட்டிகளும் கூடுதலாக 3 தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்க வேண்டும் என்றனர்.

தென்காசி.ஏப்.9-  தாம்பரம் - செங்கோட்டை  இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் ரயில் சேவை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயங்க தொடங்கவுள்ளது.   1904-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையாக ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்த நெல்லை-தென்காசி ரயில் வழித்தடத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றப்பட்டு பயணிகள்  ரயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கி யது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக் க்கப்பட்ட இந்த மீட்டர் கேஜ் வழித் தடத்தில் கொல்லத்தில் இருந்து 2 தினசரி ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. ஆனால் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும்  தற்போது வரை இந்த வழித்தடத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லாத நிலையே இருந்து வந்தது.  

தற்போது தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை இயக்கப்படவுள்ள ரயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப் படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் வண்டி எண் 20683/ 20684 தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் வருகிற 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் இருந்தும், 17ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் செங்கோட்டையில் இருந்தும் வாராந்திர சேவையாக ஏப்ரல், மே என இரண்டு மாதங்கள்  இயங்கும். ஜூன் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு  புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப் புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக் குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி அம்பை பாவூர்சத்திரம் தென்காசி ரயில் நிறுத்த ங்களுடன் செங்கோட்டையை 10.50-க்கு சென்றடையும்.   ஜூன் 2-ந் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05-க்கு தாம்பரம் வந்த டையும். 2 இரண்டடுக்கு குளிர் சாதனப்பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 படுக்கும் வசதி பெட்டிகள், மூன்று  முன்பதிவில்லா பெட்டிகள்,2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டி ருக்கும். பெட்டிகள் அனைத்தும் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகள் ஆகும். தாம்பரம்- திருவாரூர் இடையே மின்சார என்ஜி னிலும், திருவாரூர்-செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும். தாம்பரம்-செங்கோட்டை இரு மார்க்கத்திலும் பயண நேரம் 13  மணி 50 நிமிடங்களாகும்.