states

உலகச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஜெர்ப்-யுடிஎப் கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைத்தன. அந்தக் கூட்டணியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ருமென் ரடேவ் அழைத்தார். ஆனால், அவர்களால் பெரும்பான்மை பலத்தை அடைய முடியவில்லை. தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிக்கு வாய்ப்பு அளித்துள்ளார். 

ஈரான், துர்க்மெனிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டு ஒத்துழைப்பு உடன்பாடுகளும், மூன்று  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இரு நாடு களுக்குமிடையில் பொருளாதார மற்றும் எரிபொருள் ஒத்து ழைப்பை விரிவாக்கம் செய்ய இந்த உடன்பாடுகள் உதவும் என்று  கூறப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி,  துர்க்மெனிஸ்தானின் மக்கள் அவைத் தலைவர் குர்பான்குலி பெர்டிமுகமதுடோ ஆகிய இருவரும் இவற்றில் கையெழுத்திட்டார்கள்.

தெற்கு சூடானுக்கு எதிரான தடைகளை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சில் நீட்டித்துள்ளது. ஆயுதங்களை பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகள் தெற்கு சூடான் மீது விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடை மே 31, 2024 ஆம் தேதி வரையில் இருக்கும். பாதுகாப்புக் கவுன்சிலில்  வாக்கெடுப்பு வந்தபோது பத்து நாடுகள் தடை நீட்டிப்புக்கு ஆதரவாக வாக்களித்தன. ஐந்து நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.