தேனி, ஏப்.13- தேனி அருகே கோழி பண்ணைக்கு சொத்துவரி போட லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர், ஊராட்சி பெண் தலைவரின் கணவர் என இருவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். தேனி ஒன்றியம் பூமலைக்குண்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது கோழிப்பண்ணைக்கு மின்இணைப்பு பெற விரும்பி னார். இதற்கு சொத்து வரி ரசீது தேவைப்பட்டதால் பூமலைக்குண்டு ஊராட்சியை அணுகினார். அப்போது ஊராட்சி செயலர் செந்தில்ஆண்டவர், ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் முருகன் ஆகி யோர் ரூ.12ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.பணத்தை கொடுக்க விரும்பாத அருண்குமார் தேனி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனையின்படி லஞ்சத்தை நேற்று கொடுத்தார். இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்கா ணிப்பாளர் கருப்பையா தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனை செய்தனர். இதில் செந்தில்ஆண்டவர், முருகன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.