states

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்

பஞ்சாலை-விசைத்தறி தொழிலாளர்களும் பங்கேற்பு

ஹைதராபாத் ,மார்ச் 12- பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலில் செயல்படக்கூடிய சங்கங்களின் அகில இந்திய கூட்டம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா தலைமையில் நடைபெற்றது.  அகில இந்திய நிர்வாகிகள் ஆர். கருமலையான், சாய்பாபா, ரமேஷ் (தெலுங்கானா) கோபிநாத் (கேரளா) எம்.சந்திரன் (தமிழ்நாடு) மற்றும் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் எஸ்.சக்திவேல், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி, பொருளாளர் எம்.அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவில்  ஒருங்கிணைப்புக்குழுவை அமைப்பதற்காக  கோயம்புத்தூரில் மே 17 அன்று மாநாடு நடத்துவது என்றும் பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலில் செயல்படக்கூடிய சங்கங்கள் மார்ச் 28 ,29 இல் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சென்னை, மார்ச் 12- பீடித் தொழிலையும், தொழி லாளர்களையும் பாதுகாத்திட மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில்  5 லட்சம் பீடித் தொழிலா ளர்கள் பங்கேற்கிறார்கள் என்று தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மே ளனம் (சிஐடியு)  அறிவித்துள்ளது. இதுகுறித்து சம்மேளன தலை வர் எம்.பி.ராமசந்திரன், பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், பொ ருளாளர் எஸ்.பாப்பூ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஒன்றிய அரசின் தவறான ஜி.எஸ்.டி. கொள்கையினால் பீடிக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள் ளதால் பீடித்தொழில் கடும் நெருக்க டிக்கு உள்ளாகி லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.   ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கை களுக்கு எதிராக மார்ச் 28, 29 தேதி களில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள் ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்.  இதற்கான வேலைநிறுத்த அறிவிக்கையை மார்ச் 11ஆம் தேதி அனைத்து சங்கங்களும் பீடி டிரேட் மார்க் கம்பெனிகளுக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பீடித்தொழிலை பாதுகாத்திடவும், ஜிஎஸ்டி வரியை குறைத்திடவும் நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து பீடி நிறுவனங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.