சென்னை, ஏப்.15- சென்னை அருகே பள்ளிக் கரணையில் ரூ.20 கோடி செலவில் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வனத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மதிவேந்தன்,“நாட்டின் தென்கோடியில் அமையப் பெற்றுள்ள நமது மாநிலத்தின் பரப்பு 1,30,060 சதுர கிலோ மீட்டராகும். இது நாட்டின் மொத்த பரப்பளவில் 3.96 விழுக்காடாக உள்ளது. புவியி யல் ரீதியாக கடலோர சமவெளி கள், கிழக்கு தொடர்ச்சி மலை கள், மத்திய பீடபூமி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் என நான்கு மண்டலமாக மாநிலம் பிரிக்கப்பட்டுள் ளது” என்றார். அழிவின் விளிம்பிலுள்ள அரிய வகை தேவாங்கு இனமா கும். எனவே, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ.20 கோடியில் அமைக்கப் படும். இந்தியாவிலேயே பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். ஆகவே, இந்த ஏரியில் சூழல் மறுசீரமைப்பு பணிகள், சூழல் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவிலுள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 19.33 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் நீர்ப்பறவைகளின் மிகப்பெரிய இனப்பெருக்க ஈரநிலப்பகுதியாகும். இங்கு ரூ.6 கோடி சூழல் மறுசீர மைப்பு மற்றும் சூழல் சுற்றுப் பணிகள் செய்து கொடுக்கப் படும் என்றும் புதிய அறிவிப்பு களை அறிவித்தார். சென்னை அருகே உள்ள பழவேற்காடு சரணாலயம் அடர் உப்புநீரை கொண்ட இரண்டாவது பெரிய ஏரியா கும். இந்த பறவைகள் சரணா லயத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ. 3.70 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். அரிய லூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மதிவேந் தன் அறிவித்தார்.