states

பழனி கோவில் கட்டண உயர்வு குறையும்

சென்னை, ஜூன் 24- பழநி தண்டாயுதபாணி முருகன் கோவில் கட்டண உயர்வை வெகு விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.  இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வருகை விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “எச்ஆர்சிஇ”எனும் கைபேசி செயலி யினை, அமைச்சர் பி.கே.  சேகர்பாபு சென்னையில் சனிக்கிழமை யன்று (ஜூன் 24)  தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்த செயலி மூலம் திருக்கோயில்கள் ஆய்வு, திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள், உழவாரப் பணிகள், திருப்பணிகள் ஆய்வு போன்ற நடவடிக்கைகளை புகைப்படங்களாகவும், குரல் வழி செய்திகளாகவும் பதிவு செய்யவும், ஆவணங்களை பதிவேற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். ஆண்டுதோறும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்படும் தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் கண்காணிக்க முடியும். இச்செயலியில் பதிவு செய்யப் படும் விவரங்களின் அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிகளை செம்மைப்படுத்தி, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும்.

 சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொறுத்தளவில் ஒவ்வொரு அடியை யும் மிக கவனத்தோடு, நிதானத்துடன்  எடுத்து வைத்துக் கொண்டிருக் கிறோம். சட்ட விரோதமான நடவடிக் கைகளை தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். 

மூடப்பட்ட 
கோயில்கள் திறக்கப்படும் 

மக்களிடையே கருத்து வேறுபாடு கள் காரணமாக மூடப்பட்டுள்ள கோயில்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூடப் பட்டிருந்த 9  கோயில்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரை கள்ளிக்குடி வாலகுருநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை தென்முடியனூர் முத்துமாரியம்மன், சேலம் திருமலைகிரி மாரியம்மன், கூனாண்டி யூர் மாரியம்மன்,  வடகுமரை காளஹஸ்தீஸ்வரர், புதுக்கோட்டை, இறையூர் அய்யனார், விராலிமலை தென்னிலை பட்டி முத்துமாரியம்மன், கரூர் வீரணம்பட்டி காளியம்மன், திருவாரூர் செம்பியன் கூந்தலூர் காளியம்மன் ஆகிய கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.