states

பச்சையப்பன் கல்லூரி விவகாரம்: தனி நீதிபதி உத்தரவு நிறுத்திவைப்பு

சென்னை, நவ.22- பச்சையப்பன் அறக்கட்ட ளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசா ரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி யம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக உதவி பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள், “எங்கள் தரப்புவாத த்தை கேட்காமலேயே உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என வாதிட்டனர். அப்போது பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “152 உதவி பேராசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருக்கவில்லை” என்று கூறினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “நீதிமன்றம் உத்தரவிட்டதால் உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாக தெரி வித்தார்.  இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி யாகாத நிலையில் 254 உதவி  பேராசிரியர்களின் பணி நியம னத்தை ஒட்டு மொத்தமாக ரத்து  செய்த தனி நீதிபதியின் உத்தரவு  நிலைக்கத்தக்கதல்ல எனக்கூறி  வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின்  உத்தரவு நிறுத்தி வைக்கப்படு வதாக நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.