சென்னை, ஜூன் 30- தொழிலாளர் விரோத நடவடிக்கை யாக தூய்மைப்பணியை தனியாருக்கு விடுவதைக் கண்டித்தும் இதனை ரத்து செய்யக்கோரியும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஜூலை 12 அன்று சிஐடியு மறியல் போராட்டத்தை நடத்துகிறது. சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஜூன் 28,29 ஆகிய தேதிகளில் சென்னை யில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன்,எஸ்.கண்ணன், கே.ஆறுமுகநயினார் உட்பட மாநில நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணி யை வெளிமுகாமைக்கு விடுவது என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பையும்செய்து, தூய்மைப் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பும், ஊதியமும் ேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது, இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கையினை கண்டித்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிஐடியு சார்பில் ஜூலை 12 அன்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளில் மறியல் போராட்டம் நடத்தப்படு கிறது.