புதுதில்லி, மே 24- புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஒன்றிய மோடி அரசு நிராகரித்த நிலையில், விழாவை புறக்க ணிப்பதாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சி கள் கூட்டாக அறிவித்துள்ளன. தில்லியில் தற்போது இருக்கும் நாடா ளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் “சென்ட் ரல் விஸ்டா” என்ற பெயரில் புதிய நாடா ளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019இல் தொடங்கின. 2021, 2022இல் கொரோனா காலத்திலும் இதற்கான பணி கள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சுமார் ரூ. 862 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக் கப்பட்டுள்ளது.
மே 28 திறப்பு விழா
இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28 அன்று தேதி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு தேதி, திறந்து வைப்பவர் என இரண்டிலும் மிகப்பெரிய சர்ச்சை உள்ளது. ஒன்று, மே 28 என்ற நாள் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரி டம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, ஆதரவாக செயல்பட்ட சாவர்க்கர் பிறந்த நாள்; மற்றொன்று, நாட்டின் முதல் குடிமக ளாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருக்கும் பொழுது, அவருக்கு சாதாரண அழைப்பு கூட விடுக்காமல் பிர தமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது என இரண்டு சர்ச்சைகள் தீவிரமாக எழுந்துள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அர சிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மோடி அரசு நிராகரித்தது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்ப தாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கி ரஸ், சிவசேனா (உத்தவ்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், திரி ணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதி முக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
19 எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை
இக்கட்சிகள் சார்பில் மே 24 புதனன்று கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு: புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா ஒரு முக்கியமான நிகழ்வாகும். தற்போதைய அரசாங்கம் ஜனநாய கத்தை அச்சுறுத்துகிறது என்று நாங்கள் நம்பினாலும், புதிய நாடாளுமன்றம் கட் டப்பட்ட எதேச்சதிகார முறையை நாங் கள் ஏற்கவில்லை என்றாலும், இத்த கைய வேறுபாடுகளைக் கைவிட்டு புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தயாராக இருந்தோம். ஆனால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை முற்றிலு மாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, மிகப் பெரிய அவமரியாதை மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டமா னது, பிரிவு 79 இல், “ஒன்றிய அரசுக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்; அது, குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கும்; அந்த இரண்டு அவைகள் முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என அறியப்படும்” என்று கூறுகிறது. குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளு மன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியும் ஆவார். அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி, முன்னுரை செய்து, உரை யாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் சட்டம் அமலுக்கு வருவதற்கு குடியர சுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் குடியர சுத் தலைவர் இல்லாமல் நாடாளு மன்றம் இயங்க முடியாது. ஆனாலும் குடியரசுத் தலைவர் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற செயல், குடியரசுத் தலைவரின் உயர் பதவியை அவமதிப்பதோடு, அரசி யலமைப்பின் உறுதி மற்றும் உணர்வை மீறுகிறது; இந்திய தேசம் தனது முதல் பெண் ஆதிவாசி குடி யரசுத் தலைவரைக் கொண்டாடுகிற அந்த உணர்வைக் குறைத்து மதிப்பிடுகிறது. நாடாளுமன்றத்தை இடையறாது வெறுமையாக்கிய பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதியவை அல்ல. இந்திய மக்களின் பிரச்சனைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; இடை நீக்கம் செய்யப்பட்டனர்; அவர்களின் குரல் நெரிக்கப்பட்டது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தை சீர்குலைத்துள்ளனர். மூன்று விவசாயச் சட்டங்கள் உட்பட பல சர்ச்சைக்குரிய சட்டங்கள் கிட்டத் தட்ட எந்த விவாதமும் இன்றி நிறை வேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்கள் நடைமுறையில் செய லிழந்துவிட்டன.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் தொடர்பாக இந்திய மக்களுடனோ அல்லது எம்பிக்களுடனோ கலந்தா லோசிக்காமல், நூற்றாண்டிற்கு ஒருமுறை நடக்கும் தொற்றுநோய் பரவல் காலத்தின் போது பெரும் செலவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து ஜன நாயகத்தின் ஆன்மா பறிக்கப் பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டடத்தின்பால் எந்த மதிப்பையும் நாங்கள் காணவில்லை. புதிய நாடாளு மன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பது எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். இந்த எதேச்சதிகாரப் பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக - உறுதியான முறையிலும், உணர்வுப்பூர்வமான முறையிலும், வலுவான முறையிலும் - தொடர்ந்து போராடுவோம்; மேலும் இச்செய்தியை நேரடியாக இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்வோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் கையெழு த்திட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மறுத்துவிட்டது. எனினும் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அக்கட்சி தனியாக அறிவித்துள்ளது.