தேனி, ஜூன் 20 - கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலைகளை திறந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)வலியுறுத்தியுள்ளது. சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஏ.பி நினை வகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம். சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன் வர வேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் எம். அசோகன், மாநிலப் பொருளாளர் எஸ். சக்திவேல், அண்ணா கூட்டுறவு மில் சிஐடியு செயலாளர் ஏ. லட்சுமணதாஸ் உட்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலைகளை திறந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். பிளாட் போட்டு விற்கும் நோக்குடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை சரியல்ல. தமிழ்நாடு அரசு இயக்கி வரும் கூட்டுறவு பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தினசரி ஊதியம் 600 ரூபாய்க்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாத நிலையில், குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் காலம் நிறைவு பெற்றதாலும், குழுத் தலைவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாலும் உரிய கூலி நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குழுவை செயல் படுத்தி குறைந்தபட்ச கூலி அரசாணையை காலதாமதம் இல்லாமல் வெளியிட வேண்டும். இஎஸ்ஐ உச்சவரம்பு காரணமாக தொழி லாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தா ருக்கும் பாதிப்பு இல்லாமல் நிர்வாக பங்களிப்பு டன் கூடிய மருத்துவ திட்டங்களை நிர்வாகம் அம லாக்க வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலையில் மக்கள் சந்திப்பு இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம் அய்யப்பன் மில்லில் பணிபுரிந்து பாதிக்கப்பட்டுள்ள 3 தொழிலாளர்கள் நடத்த தீர்மானித்துள்ள குடியேறும் நிகழ்விற்கு சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. அண்ணா கூட்டுறவு மில்லில் பணிநிரந்தர உத்தரவை நிர்வாகம் அமலாக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் விஜயகுமார் மில், கமல் குமார் மில் ஆகிய ஆலைகள் ஏலம் விடப்பட்ட பின்பு தொழிலாளர்களுக்கு உரிய நஷ்டஈடு, பணப்பலன்களை வழங்காதது சரியல்ல. எனவே, அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை மாதம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.