சென்னை, அக். 2- தேசத்தந்தை காந்தி யடிகளின் 154ஆவது பிறந்த நாளையொட்டி “தமிழகம் காந்திய மண் எனச் சூளு ரைப்போம்” என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தி யாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தி யார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்து வமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர் வைத் தூண்டும் சக்திக ளுக்கு என்றும் இடமில்லை, இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என்று தெரி வித்துள்ளார்.