சென்னை,நவ.9- தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி விவ சாயிகள் சங்கங்கள் சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன். பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: விவசாயிகளையும், விவசாயத்தை யும், நீர்நிலைகளையும் அழித்தொழிக் கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, இச்சட்டத்தை உடனே திரும்பப்பெற வலியுறுத்துகிறோம். கடந்த 21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நில ஒருங்கி ணைப்பு சட்ட மசோதா முன்மொழி யப்பட்டது. அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோ தாவிற்கு தமிழக ஆளுநர் ஆகஸ்ட் 23 இல் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று தமிழ்நாடு முழுவதும் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் பின்னர் 22.06.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொ டர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக விவசா யிகளும், பல்வேறு விவசாய சங்கங்க ளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வரு கின்றனர். இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டு காலமாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது. தற்போது இந்த சட்டத்தை அமல் படுத்துவதற்கான சட்டவிதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டி ருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவ சாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தை கைய கப்படுத்தும் போது விவசாயிகள் ஒப்பு தல் பெற்று செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரானது இந்த சட்டம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இச்சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். எதிர்காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பதற்கு தற்போது கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதே விவசாயிகளுக்கு செய்யும் நன்மையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.