states

img

குறையும் பறவைகள் எண்ணிக்கை

நைரோபி, மே 24- கால நிலை மாற்றத்தால் ஆப்பிரிக்காவில் உள்ள  பறவைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள் ளது. காலநிலை, இருப்பிட மாற்றங்கள் மற்றும்  மாசுபட்ட தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆப்பிரிக்காவில் உள்ள பறவைகள் மற்றும் ஆப்பிரிக்கா வுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் ஆகிய இரண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக,  பூநாரைகள்(பிளாமிங்கோ) இருப்பையே இந்த சூழல்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன என்கிறார் நகுரு  தேசியப் பூங்காவின் பாதுகாவலரான கரோலின் வேபியா.  இனப்பெருக்கத்திற்கான சூழல் சீர்குலைந்துவிட்டதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். அருகில் உள்ள தான்சானியா நாட்டிற்கு செல்லும் பறவைகளின் இனங்கள் ஓரளவு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இப்போதைக்கு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.