சென்னை, பிப். 9- சிஐடியு அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் மாநில மைய கூட்டம் சென்னையில் அண்மையில் ஆட்டோ சம்மேளனத் தலைவர் வி.குமார் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், ஆட்டோ சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, சாலைப் போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தமானது ஒட்டுமொத்த மோட்டார் தொழிலையும் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய வாகனங்களை அழிப்பது என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது பல லட்சக்கணக் கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கையாகும். ஆன்லைன் அபராதம் விதிப்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அந்த தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அரசே கட்டணம் தீர்மானித்து செய லியை உருவாக்க வேண்டும், மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18 முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ஸ்டாண்ட், வேன் ஸ்டாண்ட், பெட்ரோல் பங்க், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து மோட்டார் தொழிலாளர்களையும் சந்தித்து துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்வது, பிப்ரவரி 28ஆம் தேதி காலை 12 மணி முதல் 12.15 வரை கால் மணி நேரம் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.