states

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

சென்னை,ஜூலை 6- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை வழங்கி வரும் கல்லூரி கள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகத்தின் அனு மதியையும், அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தையும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் 2022-23 கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் ஜன.10ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையில் அபராதம் இல்லாமலும், மே 7ஆம் தேதி வரையில் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடனும் விண்ணப்பங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து பேரா சிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கல்லூரியின் கட்ட மைப்புகள் கூகுள் மேப் மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது  ஆசிரியர்கள் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தில்  பதிவு செய்த எண், ஆதார் விபரம், பான் எண் போன்றவையும்,  சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட் டன.

தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறி யியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ், அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தின் விதி முறைகளின் படி தகுதியான பேரா சிரியர்கள், போதிய உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகுதியான ஆசிரியர்கள் ஆய்வகங்கள் மற்றும் உப கரணங்கள் போன்ற கல்லூரிகள் இணைப்பு நீட்டிப்பைப் பெற இரண்டு வாரங்களுக்குள் முரண் பாடுகளை சரி செய்து அறிக்கை யளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 69  கல்லூரிகளும், கோவை மண்ட லத்தில் 81 கல்லூரிகளும், திருச்சி மண்டலத்தில் 25 கல்லூரிகளும், மதுரை மண்டலத்தில் 20 கல்லூரி களும், நெல்லை மண்டலத்தில் 30  கல்லூரிகளும் 50 விழுக்காடு அளவிற்கு கூட போதுமான உட்கட்டமைப்புகளை பெற்றி ருக்கவில்லை. இந்தக் கல்லூரிகள் தங்களின் விளக்கத்தை ஜூலை மாதம் இறுதிக்குள் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியப் பின்னர் தான் அவர்கள் கேட்ட அள விற்கு மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு அனுமதி அளிக்கப் படும் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

;