- கடலுக்கு அடியில் ஜெர் மனி செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன் இணைப்பு வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க ரஷ்யா தயா ராக உள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான “தி அசோ சியேட்டட் பிரஸ்” தகவல் தெரிவித்துள்ளது.
- அரசு மேல்நிலைப் பள்ளி களில் உள்ள 2,849 முதுகலை ஆசிரியர் பதவி களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு அறிவிக்கப் பட்டு, தெரிவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி நியமனத்துக்கான கலந்தாய்வு அக்டோபர் 13-ஆம் தேதி நடை பெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- கன்னியாகுமரி மாவட் டம் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும், கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி யான உஷா தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும் பும் வழியில் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
- வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான கமல் பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டுகளுக்கான தடை உத்தரவை பெற்றுள்ளார். 2022-ஆம் ஆண்டு பாட்டியாவில் நடை பெற்ற போட்டியின் பொழுது ஊக்கமருந்து பயன்படுத்தியது சோத னையில் உறுதியாகி யுள்ளது.
- ஆட்டோ பைலட் முறை யில் இயங்கும் பறக்கும் டாக்ஸிக்கான சோதனை யை துபாயில் தொடங்கி யுள்ளது சீனாவை சேர்ந்த ஸ்பெங் (XPeng) என்ற நிறுவனம். இந்த பறக்கும் டாக்ஸிக்கு முன்பதிவு செய்ய ஆப் (APP) ஒன்றையும் விரை வில் அமல்படுத்த உள்ள தாக ஸ்பெங் நிறுவனம் தகவல்.
- “நான் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் பேசவில்லை. நான் அவரிடம் பேசிய தாக வெளியான தகவல் தவறானது. மேலும் உக்ரைன் அமைதி பேச்சு வார்த்தை குறித்து நான் பேசவில்லை. விண்வெளி தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினி டம் 18 மாதங்களுக்கு முன் ஒரே ஒருமுறை பேசி னேன்” என உலகின் முதல் நிலை பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரு மான எலன் மஸ்க் தகவல்.