சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடை விடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்த கத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவி கள் இடம் பிடித்து சாத னை படைத்தனர்.
ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பென்னி வாங்குக்கு ஒன்றிய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்துகள் தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைக் காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து திங்க ளன்று அழைத்துவரப் பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை செயல்படுத்த ப்பட்டுள்ளது.
ஜப்பான் பன்னாட்டு நிறு வனமான என்இசி கார்ப்ப ரேஷன் தலைவர் நோபு ஹிரோ எண்டோவுடன், பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று டோக்கியோ வில் சந்திப்பு நடத்தினார்.
ரயில் பயணக் கட்டணத் தில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலு கையை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பி னர் பினோய் விஸ்வம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மித மான மழைக்கு வாய்ப்புள்ள தாக என சென்னை வானி லை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த மக்க ளவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை விசா ரிக்க மேலும் 3 நாள்கள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநக ரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை காவல் துறையினர் கைதுசெய்த னர். கைதான இருவரி டம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள், 300 தோட் டாக்கள், 30 இதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.