கார்தோம், ஏப்.26 - சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐக்கிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “72 மணி நேர போர்நிறுத்தத் திற்கு இருதரப்பும் சம்மதித்தாலும் கூட, அது முழுவீச்சில் அமல்படுத்தப் படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சய மாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இதனால் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” என தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, சூடானின் கார்தோம் நகரில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் வன்முறையாளர் களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏதே னும் விபரீதம் நடந்தால் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளில் கசிவு ஏற்படலாம்.
இதனால் சூடானில் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டாலும் இரு தரப்பும் அதற்கு கட்டுப்பட வில்லை. தலைநகர் கார்தோம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சண்டையால் இதுவரை 427 பேர் உயிரிழந்ததாகவும், 3,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்புகள் தெரிவிக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாத், தெற்கு சூடான், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். சூடானில் வெளிநாட்டு தூதரகங் களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல்மார்க்க மாக பத்திரமாக வெளியேற்றும் நட வடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடு பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் மற்றும் ஐ.நா. படையை சேர்ந்த 700 பேரும் சூடானிலிருந்து வெளியேறி யுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.