சென்னை,நவ.23- கோயில்களில் கட்டண மற்றும் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் சீராய்வுக் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திரு வண்ணாமலைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விரிவான ஏற்பாடுகளைச் செய்வதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விஐபி தரிசனத்தை ரத்து செய்வோம்! தமிழகத்தில் இதுவரை 3,057 ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்து ரூ.3,739 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் துறை சார்பில் மீட்டெடுத்துள்ளோம். நிலுவை யில் இருந்த வாடகை தொகை ரூ.254 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. கோயில்க ளில் விஐபி தரிசனத்தை படிப்படியாகக் குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டுக் கொண்டி ருக்கின்றது. திருத்தணி ஆடிக்கிருத்திகை , திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் போதும் விஐபி தரிசனத்தை நிறுத்தி விட்டோம். திருச்செந்தூரில் கந்தசஷ்டிவிழாவின்போது 600 பேர் பாந்து என்ற முறையில் 10 நாட்கள் திருக்கோயில் உள்ளே தங்கும் முறையை முழுமையாக ஒழித்து உத்தர விட்டது இந்த அரசு. பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாகக் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.