states

சுங்கக் கட்டணக் கொள்ளை: ஒப்புக்கொண்டார் நிதின் கட்காரி

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டா; நிர்மலா சீதாராமனுக்கு பதிலடியா?

“1991-ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் அரைகுறையானவை” என்று சில வாரங்களுக்கு முன்புதான் ஒன்றிய அரசின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், மன்மோகன் சிங்கை விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனமும் தெரிவித்திருந்தது.  இந்நிலையில், “1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தபோது துவங்கிவைத்த பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்காக இந்த நாடு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடன்பட்டுள்ளது” என்று மூத்த அமைச்சரான நிதின் கட்காரி தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது, நிர்மலா சீதாராமனுக்கு அளிக்கப்பட்ட பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. கட்காரியின் இந்த பாராட்டை டுவிட்டரில் மேற்கோள் காட்டியிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “செப்டம்பர் 16 அன்று, மேடம் (நிர்மலா சீதாராமன்) 1991 சீர்திருத்தங்களை ‘பாதி வேகாதது’ (அரை வேக்காடு) என்று  குறிப்பிட்டு சிறுமைப்படுத்தினார். ஆனால், நேற்று, ‘மாஸ்டர்செப்’ கட்காரி அதை முழுமையாக வேகவைத்துள்ளார். எனவே, இப்போது நிர்மலா சீதாராமனால் ஜீரணிக்க முடியும் என நம்புகிறேன்” என்று கிண்டலடித்துள்ளார்.

புதுதில்லி, நவ. 10 - சாமானிய மக்களிடம் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை அதிகரித்து வருவதை,  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்காரி தனது உரையின் மூலம் ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக தில்லியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்காரி மேலும் பேசியிருப்பதாவது: 1991-இல் ஒன்றிய அரசின் நிதி யமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். அவர் தொடங்கிய பொருளா தார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா புதிய திசையை நோக்கிப் பய ணிக்கத் துவங்கியது. அது தாராளமய பொருளாதாரத்துக்கு வழிவகுத்தது.

இந்த தாராளமயமான பொருளாதார கொள்கை என்பது விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்குமானதுதான். இந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கிற்கு நாடு கடன்பட்டுள்ளது.  1990-களின் மத்தியப் பகுதியில் மகா ராஷ்டிராவில் அமைச்சராக இருந் தேன். அப்போது மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலைகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணி துவங்கியது. இதற்கு மன்மோகன் சிங்-கின் பொருளாதார சீர்திருத்தங்கள் கைக்கொடுத்தன. நாட்டின் வளர்ச்சிக்கு தாராளமய பொருளாதார கொள்கை எப்படி உத வும் என்பதற்கு சீனா சிறந்த உதாரண மாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் நாட்டுக்கு அதிக முதலீடு தேவையான தாக உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் சாமானி யர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்சாலைகள் அமைக்கப் பட்டு வருகின்றன. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யத்தின் சுங்கவரி வருவாய் தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடியாக உள்ளது. 2024 இறுதியில் இது ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.” இவ்வாறு நிதின் கட்காரி பேசியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் நாட்டுக்கு அதிக முதலீடு தேவையான தாக உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் சாமானி யர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்சாலைகள் அமைக்கப் பட்டு வருகின்றன. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யத்தின் சுங்கவரி வருவாய் தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடியாக உள்ளது. 2024 இறுதியில் இது ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.” இவ்வாறு நிதின் கட்காரி பேசியுள்ளார்.