சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்ப டும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொரு ட்டு ஜீவன் பிரமான் இணைய தளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதே னும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப் பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத் தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதி யர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்த படியே தபால் துறை பணியாளர்கள் மூல மாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின் னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூ தியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்ட ணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்கா ணல் செய்யலாம். ஓய்கூதியர்கள் சங்கத் தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லா மல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி பயன்படுத்தி வீட்டிலிருந்த படியே மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்ய லாம் மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பிபிஓ எண், வங்கி கணக்கு எண், ஓய்வூ தியம் வழங்கும் அலுவலகம் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் வாழ்நாள் சான்றினை (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதி றக்கம் செய்து கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூ லத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம். ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காண லில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர், மண்டல இணை இயக்குநர் அல்லது சென்னை கருவூல கணக்குத் துறை ஆணையரகத்திற்கு தொலை பேசி, மின்னஞ்சல் வாயிலாக தெரி விக்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 599 5100.