states

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவுக்கு புதிய செயலி

சென்னை, டிச. 24- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரி யர்கள், ஆசிரியல்லாத பணியா ளர்கள், மாணவர்கள் ஆகியோரின் வருகைப்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எளிமையான முறையில்  வருகையை பதிவேற்றம் செய்வ தற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக் கென மட்டும் தனியாக டிஎன்எஸ் இடி அட்டெண்டென்ஸ் என்ற செயலி  உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்க ளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி  1ஆம் தேதி முதல் இதனை தமிழ கத்தின் பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இப்புதிய செயலியை பயன் படுத்துவதற்கு முன்பு பழைய வருகை பதிவு செயலியில் இருந்து வெளியேற வேண்டும். பழைய செயலிகள் அனைத்தும் டிசம்பர் 31 முதல் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய செயலியில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி யர்கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கும் காலை மற்றும்  மாலை என்று இரண்டு நேரங்களில் வருகை  பதிவு செய்யப்படும். அதோடு இணைய சேவை இல்லாத நேரத்தில்  வருகை பதிவு போனில் பதிவு செய்யப்பட்டு இணைய சேவை கிடைத்தவுடன் கல்வித்துறைக்கு அப்டேட் ஆகிவிடும். இந்த செயலியில் உள்நுழைய ஏற்கனவே பணியாளர்கள் பயன் படுத்திய யூசர்நேம், பாஸ்வேர்டு களையே புதிய செயலிக்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படு கின்றனர். புதிய செயலியில் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தை கள் (CWSN) மாணவர்களுக்கு வருகை பதிவு எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் TNSED attendence என்று  தேடியும் https://play.google.com/store/apps/details id=in.gov.tnsedattendance.tnemis&hl=en_IN& gl=IN & pli =1 என்ற இணைப்பு மூலமும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.