states

யாரிடமும் வெறுப்புணர்வை காட்டியதில்லை: ராகுல் காந்தி

போபால், நவ.27- காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது.  அப்போது ராகுல்காந்தி கூறியுள்ள தாவது:  அம்பேத்கர், மகாத்மா காந்தி,  ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர  போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் நமக்கு அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது.  அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு  சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்ப டையாக அழிக்க முடியாது. அவர்கள்  அதை முயற்சித்தால், நாடு அவர்களை  தடுத்து நிறுத்தும்.  அதனால் அரசியலமைப்புச் சட் டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனது ஆட்களை, முக்கிய அமைப்புகள், நீதித் துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வரு கிறது. அதனால் பாஜக, பிரதமர் மோடி ஜி, அமித் ஷா, ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், உங்கள் பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அஞ்சம் கொண்ட வர்களால் நேசிக்க முடியாது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.