புதுதில்லி, ஜூன் 6 - பண்டிட்டுகள் உள்ளிட்ட காஷ்மீரி மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக ஒன்றிய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச் சாட்டு வைத்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினா், வெளி மாநி லத்தவர், காவல்துறையினரைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்ற னர். அரசு ஊழியா்களைக் குறி வைத்தும் இந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக அரசு ஊழியா்கள், குறிப்பாக காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களை ஜம்மு பகு திக்கு பணியிட மாற்றம் செய்யக் கோரும் முழக்கங்கள் வலுத்து வரு கின்றன. இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணராமல் காஷ்மீரி மக்க ளின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை யில், அந்த மக்களின் உணர்வு களோடு பாஜக விளையாடி வருவ தாகவும், காஷ்மீரிகளுக்கு பாது காப்பு அளிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக வும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள் ளன. “காஷ்மீர் மீண்டும் எரிகிறது. அங்கு நிலைமை கட்டுங்கடங்காமல் போய்விட்டது. ஆனால், தில்லியின் (ஒன்றிய அரசின்) முக்கிய நபர்கள் (பிரமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர்) படங்களை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். காஷ்மீரிகளின் பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. காஷ்மீரி பண்டிட்டுகள் கிளர்ச்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள் ளனர்” என்று சிவசேனா மூத்த தலை வரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மேலும், “காஷ்மீரில் தற்போது நடை பெற்று வரும் சூழலை கொண்டு பிரத மர் மோடி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் கூட இறங்கக் கூடும்” என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
“நாட்டிலுள்ள அனைத்து குடி மக்களின் உயிர்களையும் பாது காக்க வேண்டிய கடமை ஒன்றிய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு உள்ளது. ஆனால், காஷ்மீரில் இந்துக் கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டு களின் உயிர்களைக் காக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. அரசியல் கார ணங்களுக்காக ‘தி காஷ்மீரி பைல்ஸ்’ திரைப்படத்தை ஊக்குவிப்ப திலேயே பாஜக தலைவா்கள் மும்முர மாக இருந்து விட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்க ளை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி யிருப்பதற்கு, உளவுத்துறை தோல்வியே காரணம். காஷ்மீரி பண்டிட்டுகள் பாது காப்பாக சொந்த ஊா் திரும்புவதற் கான உத்தரவாதத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. இனியாவது, மதம் மற்றும் சாதி அடிப்படையிலான அர சியலை பாஜக நிறுத்திக்கொண்டு, இந்திய குடிமக்களின் சமத்து வம், வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து காஷ்மீரி குடிமக்களின் பாதுகாப்பை யும் அமித் ஷா தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாஸே வலியுறுத்தியுள்ளார். “கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும் என்பதால், பாஜக- வால் காஷ்மீரை கையாள முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் பாஜக-வினர் அரசியல் செய்ய வேண்டாம். காஷ்மீரில் இலக்கு கொலைகள் நடப் பது, 1990-ஆம் ஆண்டு மீண்டும் வந்து விட்டது என்பதை வெளிப்படுத்து கிறது. அவர்களிடம் (ஒன்றிய பாஜக அரசு) எந்த திட்டமும் இல்லை” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாள ரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மேலும், “காஷ்மீர் பள்ளத்தாக் கில் எப்போதெல்லாம் கொலை நடக்கிறதோ, அப்போதெல்லாம், உள்துறை அமைச்சர் உயர் மட்ட அதிகாரிகள் கூட்டத்தை நடத்து கிறார். ஆனால், அதன் செயல் திட்டம் என்ன? என்பதையே மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்” என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.