states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை

சென்னை, ஜூலை 14- சென்னையில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு  மத்திய நிறுவனத்தின் பெயர் பலகையில்  வேண்டுமென்றே இந்தி திணிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட் டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறு வனத்தின் பெயர் பலகையில் கடந்த காலங்க ளில் இல்லாத வகையில் இந்தி திணிக்கப் பட்டிருப்பதை அரசியல் கட்சித்தலைவர்க ளும் தமிழ் ஆர்வர்களும்  கண்டித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கான கட்டிடங்களில் செய ல்பட்டு வந்தபோது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயர்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர  இந்திக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனால்,  பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட  பிறகு பெயர்ப்பலகையில் இந்தியை ஒன்றிய அரசு திணித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச மாதிரி தேர்வு!

தூத்துக்குடி, ஜூலை 14 தூத்துக்குடி நூலகத்தில் வருகிற 17-ஆம் தேதி (ஞாயிற் றுக்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக் குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக் குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.  இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 94880 71114, 99523 84714 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொ டர்ந்து தேர்வு நடைபெறும் நாளில் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பணகுடி அருகே 30 பவுன் நகை கொள்ளை

 திருநெல்வேலி, ஜூலை 14- பணகுடியை அடுத்த தெற்கு பெருங்குடி யை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன்  முருகன். இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 7-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவி னர்களை பார்ப்பதற்காக முருகன் சென்னை சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த அவர் பணகுடி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். மோப்பநாய் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மணல் திருட்டு  கொலை வழக்கில்  ஏழு பேருக்கு ஆயுள்

தென்காசி , ஜூலை 14 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டு தொடர் பாக கடந்த 2012 ஆம் ஆண்டு கருப்பசாமி என்பவரை 9 நபர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இது குறித்து மேற்படி நபர்கள் மீது அப்போதைய காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார்வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறை யில் அடைத்தார்.  இவ்வழக்கு விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  12.07.2022 அன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி அனுராதா குற்றவாளிகளான ஆலங் குளத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

தென்காசியில் பெய்த மழை அளவு  

தென்காசி ,ஜூலை 14  தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை அன்று பெய்த  மழை யளவு விவரம் வருமாறு  கடைய நல்லூரில் 14 மில்லி மீட்டர், செங் கோட்டையில் 21 மில்லி மீட்டர், சிவகிரியில் 3மில்லி மீட்டர், தென்காசியில் 13 மில்லி மீட்டர் என மொத்தம் மாவட்டத்தில் சங்க ரன்கோவில் தவிர பிற அனைத்து பகுதிகளிலும் 51 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன் கோவில் மட்டும் மழை பெய்ய வில்லை அதிகபட்சமாக செங் கோட்டையில் 21 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் புதிதாக  63 பேருக்கு கொரோனா

   திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லை மாவட்டத்தில் அதி கரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. புதன்கிழமை மாவட்டத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை தினசரி கொரோ னா பாதிப்பு எண்ணிக்கை அதி கரித்து உள்ளது. மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளை, ராதாபுரம், வள்ளி யூர் பகுதியிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துமாறு கமிஷனர் சிவகிரு ஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி 4 மண்டல பகுதி யிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமை யில் சுகாதார பணியாளர்கள் மேலப் பாளையம் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் கிருமிநாசினி தெளித்தனர்.

முஞ்சிறை, நடைக்காவு பகுதிகளில் இன்று  மின்தடை

நாகர்கோவில், ஜூலை. 14 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முஞ்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது ; முஞ்சிறை துணை மின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முஞ்சிறை, காப்புக் காடு, மங்காடு, விரிவிளை, நித்திர விளை, புதுக்கடை, கொல்லங் கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்தி லிருந்து மின்விநியோகம் இருக்காது. இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தர வனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன் கோடு, வாவறை, மணலி, பால விளை, வளனூர், சூழால், பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது. மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணி கள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

  1. உக்ரைனுக்குத் தனது படைகளை ரஷ்யா அனுப்பி இன்றுடன்(ஜூலை 15) 142ஆவது நாளாகிறது. அந்த நாளில் இருந்து இதுவரையில் உக்ரைனைச் சேர்ந்த 87 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். போலந்து நாட்டிற்குதான் அதிகமான அளவில் மக்கள் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கையில் ரஷ்யாவிடம் தஞ்சம் புகுந்த 15 லட்சம் பேரும் அடங்குவர். இவ்வாறு வெளியேறியவர்களில் பெண்களும், குழந்தைகளும் தான் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
  2. வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக உக்ரைன் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆதரவுடன் இருக்கும் இரண்டு பகுதிகளை மக்கள் குடியரசுப் பகுதிகளாக ஏற்றுக் கொள்வதாக வடகொரியா அறிவித்திருந்தது. இதனால், தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் நில ரீதியான ஒற்றுமைக்கு எதிராக வட கொரியா செயல்படுகிறது என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. வடகொரியாவுக்கு முன்பு, ரஷ்யா மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் மக்கள் குடியரசுப் பகுதிகள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன.
  3. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் எந்தவிதத் தொய்வும் ஏற்படவில்லை. இருப்பினும், முடங்கிக் கிடக்கும் உணவு தானியங்களை எடுப்பது பற்றி இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனின் ஓடெசா துறைமுகத்தில் 2 கோடி டன் தானியங்கள் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் உலக அளவில் உள்ள உணவு நெருக்கடியில் தளர்வு ஏற்படும்.