தூத்துக்குடி, ஆக.5- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் அருங் காட்சியகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசின் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் சனிக்கிழமையன்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆதிச்ச நல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக் கப்பட உள்ளது. ஆதிச்சநல்லூரில் பல கட்டங்க ளாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரிய வந் துள்ளது. மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளன. அதில் அவர்கள் உபயோ கப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக உபயோ கப்படுத்தப்பட்ட நெல், தினை, தங்கம் ஆகிய வற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தொல்பொருட்களையும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க உள்ளோம். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை ஒன்றிய அரசு வழங்கும்’’ என்று கூறினார். கனிமொழி எம்.பி. கூறுகையில், ‘‘தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்வின் தொன்மையை, தமிழ்மொழியின் சிறப்பை பற்றி பேசுவதென்றால் தமிழ்மொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நம்மு டைய பெருமையை, நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்வியல் எப்படி இருந்தது, பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தது. வாழ்க்கையில் என்னென்ன சாதனைகள் செய்தனர் என்பதை அகழ்வாய்வு மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். அலெக்ஸாண்டர் ரியா அவர்களுக்கு பிறகு 100 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்திய தொல்லியல் துறை மூலம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கத்திலான வளையம் மூலம் நமது முன்னோர்கள் தங்கத்தின் பயன் பாட்டினை அறிந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. மேட்டு பகுதியில் ஈமச்சடங்குகள் செய்து மக்களை புதைத்தது தெரியவருகிறது. அங்கு கிடைத்த பொருட்களை கண்ணாடி மீது நின்று பார்க்கக்கூடிய வகையிலே அருங்காட்சி யகம் அமைக்கப்பட உள்ளது.
பராக்கிரமபாண்டியபுரத்தில் இதுவரை கண்டெடுக்கப்படாத அளவில் மிகப்பெரிய மதில் சுவர் இருந்ததற்கான ஆதாரம் நமக்கு கிடைத் துள்ளது. இந்தியாவிலேயே, உலக அளவிலே எல்லோரும் போற்றக்கூடிய அருங்காட்சியமாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய வேண்டும்’’ என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சி யர் மரு.கி.செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை பொது இயக்குநர் (புதுதில்லி) டாக்டர் கிஷோர் குமார் பாசா, துணை பொது இயக்குநர் டாக்டர் எஸ்.கே.மஞ்சுள், இயக்குநர் டாக்டர் அருண்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்ம சக்தி, ஆதிச்சநல்லூர் ஊராட்சி மன்றத் தலை வர் பார்வதி சங்கர்கணேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிர முகர்கள் உமரிசங்கர், ராமஜெயம், எழுத்தா ளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மற்றும் அலு வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.