சென்னை, அக். 30- எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நவம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெறும் என எம்.ஆர்.பி. செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித் துள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கு.சசிகலா தலைமையில் மதுரையில் சனிக் கிழமை (அக். 29) நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் நே.சுபின், பொருளாளர் இ.மைக்கேல் லில்லி புஷ்பம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யத்தின் (எம்.ஆர்.பி) போட்டி தேர்வின் மூலம் ஒப்பந்த செவிலியர்களாக பணி யமர்த்தப்பட்ட செவிலியர்களை இரண்டு வருடம் பணி நிறைவு பெற்ற பின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்க ப்பட்டது. ஆனால் ஏழு வருடம் கடந்த நிலையில் வெறும் 4,000 செவிலி யர்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். சுமார் 4,500 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் 2019ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2,500 செவிலியர்கள் மூன்று வருடங் களுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். அவர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். அரசு மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் படுக்கை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய நிரந்தர பணியி டங்கள் உருவாக்கி
ஒப்பந்த செவிலி யர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த செவிலியர் களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 2,500 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை கொரோனா பணிக் காக எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்ய ப்பட்டு செவிலியர்களாக பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த செவிலி யர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் 3ஆம் தேதி தமிழக முதல்வருக்கு அனைத்து செவிலி யர்களும் அஞ்சல் அட்டை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்றும், டிசம்பர் 16ஆம் தேதி கோரி க்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும், அதன்பிறகும் அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.