சென்னை, ஜன. 3- கொரோனா காலத்தில் பணிய மர்த்தப்பட்ட செவிலியர்கள் காலியாக உள்ள 12,000 பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது பிரச்சனையை திசை திருப்பும் விதமாக தவறான தகவலை கொடுத்துள்ளார். கொரோனா செவிலியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளார். அது முற்றிலும் தவறான செய்தி. செவிலியர்கள் எம்.ஆர்.பி தேர்வு எழுதி மதிப்பின் அடிப்படை யில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு தான் பணி நியமனம் செய்யப்பட்டுள் ளார்கள். அது அவர்கள் பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா செவிலியர்களை மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பணி அமர்த்துவதாக தெரிவித் துள்ளார். கொரோனா சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் முறையாக எம்.ஆர்.பி மூலம் தேர்வு எழுதி மதிப்பெண், மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு தான் பணி நியமனம் வழங்கப்பட்டது. அவர்களை மீண்டும் மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் கொண்டு வருவது எந்த விதத்திலும் முறையாகாது முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களை தற்போது இருக்கும் நடைமுறைப்படி தேசிய சுகாதாரக் குழுமத்தின் காலிப் பணியிடங்களில் பணியமர்த்தி பிற்காலங்களில் நிரந்தர பணி யிடங்கள் காலியாகும் போது தற்போது பின்பற்றப்படுவது போல பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சங்கம் தங்களை வலுப்படுத்திக் கொள்ள அரசியல் செய்வதாக அமைச்சர் கூறியுள்ளது வேதனை யாக உள்ளது. சங்கத்தை வலுப்படுத்து வது எங்கள் நோக்கம் அல்ல. சுகாதாரத் துறை நிரந்தரமாக அரசின் துறையாக இருக்க வேண்டும் என்பதும் அதில் பணி செய்யும் ஊழியர்கள் நிரந்தர தன்மையுடைய ஊழியர்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாவட்ட சுகாதாரக் குழுமங்களின் மூலம் செய்யப்படும் பணி நியமங்களில் இன்று வரை எந்தவித இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட்ட தாக தெரியவில்லை. இதுபோன்ற பணி நியமனங்கள் சமூக நீதிக்கு எதிராக உள்ளது. தமிழ்நாடு அரசு மருத்து வமனைகளில் 12,000 நிரந்தர பணி இடங்களும், 12,000 தேசிய சுகாதார குழு மத்தின் ஒப்பந்த பணி இடங்களும் உள்ளன. ஒப்பந்த பணி இடங்களும், நிரந்தர பணி இடங்களும் சரிசமமாக உள்ளன. அரசு கல்லூரி மருத்துவமனை களில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய செவிலியர் கவுன்சில் ஆகியவற்றின் பரிந்துரைகள் படி செவிலியர் பணியிடங்கள் இல்லை. அப்படி உருவாக்கினால் இன்னும் 12,000 பணி இடங்களுக்கு மேல் உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர தன்மையுடைய பணி யிடங்களை உருவாக்கி அரசு மருத்து வமனைகளில் தரமான சிகிச்சை வழங்குவதுடன் அரசு மருத்துவமனை கள் முழுமையாக அரசுத் துறை யாகவும் நிரந்தர தன்மையுடையதா கவும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.