states

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம்

புதுதில்லி, ஏப். 9 - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்  கழகம் (NCERT), அண்மையில் வெளியிட்ட சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத் தில் பல்வேறு மோசடி வேலைகளை அரங்கேற்றியது.  குடிமையியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங் களையும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தி லிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களையும் நீக்கியது. ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக் கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’ ஆகி யவை நீக்கப்பட்டன. இந்தியாவில் சோசலிஸ்டு கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி  மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போன்ற தகவல்கள் இந்த அத்தியாயங்களில் இடம் பெற்றிருந்த நிலையில் அவையனைத்தும் நீக்கப்பட்டன. இதுதவிர, வரலாறு பாடப் புத்தகத்தி லிருந்து முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயமே, அதாவது- (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்) இந்திய வர லாறு - பகுதி II- (‘Kings and Chronicles’ and ‘The Mughal Courts’) நீக்கப்பட்டன. இந்தி  புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும்  கவிதைகள், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. 

இந்தப் பின்னணியில்தான், அதே சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்  பாடப்புத்தகத்தில், 1973-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட சீக்கியர்களின் ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் “பிரிவினைவாத தீர்மானம்”  என்று கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளதாக சீக்கிய அமைப்புகள் தற்போது கொந்தளித்துள் ளன. ‘சுதந்திர பாரத் மே ராஜ்நிதி’ என்ற 7-ஆவது அத்தியாயத்தில்தான் இந்த  பிராந்திய சுயாட்சி கோரிக்கை - அதாவது பிரிவினைவாதம் எழுப்பப்பட்டதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது. அதாவது, “ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம், மத்திய-மாநில உறவுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோருகிறது. கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதனை தனி சீக்கிய நாட்டிற்கான கோரிக்கையாகவும் நாம் புரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளது. என்சிஇஆர்டி-யின் இந்த அவதூறுக்கு, சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) உள்ளிட்ட பல சீக்கிய அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “சீக்கியர்கள்  குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல் களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள் கிறோம். சீக்கியர்கள் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. சீக்கியர் களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டக்கூடாது. அந்த வாசகத்தை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று எஸ்ஜிபிசி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறியுள்ளார்

2023-24 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து இடம்பெற்றிருந்த தகவல்கள் நீக்கப் பட்டிருப்பதற்கும் தாமி கண்டனம் தெரிவித்துள் ளார். “இந்த கருத்துகளை எல்லாம் அகற்றுவது வகுப்புவாத செயல். ஒன்றிய அரசு தனது சொந்த  நலன் கருதி இந்த மாற்றங்களைச் செய்வது வருத்தமளிக்கிறது. சிறுபான்மையினர் பற்றிய  வாசகங்கள் நீக்கப்படுகின்றன. இது திட்டமிடப் பட்ட சதி” என்று கூறியுள்ளார். ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் குறித்துப் பேசிய அவர், “இந்தத் தீர்மானம் ஒரு வரலாற்று ஆவணம். அதில் ஒன்றும் தவறில்லை. மாநி லங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது. துரதிர்ஷ்ட வசமாக, இப்போதும் அதே நிலை நிலவுகிறது. மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. “இந்து ராஷ்டிரம்” கோருபவர்களுக்குச் சாதகமாக இவை இருப்ப தாகத் தெரிகிறது. இந்நிலையில்தான், சிறு பான்மையினரின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள்” என்றும் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறியுள்ளார்.