states

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஐ.வி.நாகராஜன்

நாடு முழுவதும் 2020-21ல் 12.43 கோடி டன் அரிசி உற்பத்தி செய் யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 13 கோடி டன் அரிசி உற்பத்தி செய் யப்பட்டு இருக்கிறது. ஆனால் குறுவைப் பருவத்தில் வரவேண்டிய உற்பத்தி பாதிக் கப்படும் வாய்ப்புள்ளது என்று சொல்லப் படுகிறது. காரணம் வடமாநிலங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைவான மழை. அதனால் 11 கோடி டன்னுக்கு பதில் இந்த குறுவைப் பருவத்தில் 10 கோடி டன் தான் வரும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒன்றிய அரசின் தகவ லாகும். ஆனால் உண்மையில் பெரிய அளவு  பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அத னால் தான் பாசுமதி அரிசியை தவிர  மற்ற அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப் பட்டு இருக்கிறது. மேலும் அரிசி ஏற்று மதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி உணவு மற்றும் வர்த்தக கொள்கைத் துறை நிபுணர் தேவீந்தர் சர்மா, இன்று கூட இந்தியா விடம் 4 கோடி டன் அரிசி உபரியாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அரிசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உபி, பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள 30 கோடி விவ சாயிகள் நிலைமையை பற்றி இன்று  யாரும் பேச மறுக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தானே எல்லாம். அவர்களுக்கு உரிய நிவாரண  நிதியை ஒன்றிய அரசு அறிவித்து இருக்க வேண்டாமா? பெரு நிறுவனங்கள் பாதிக்கப்படும் போது மட்டும் நிவாரணம் அறிவிக்கும் அரசு, விவசாயிகளை கண்டுகொள்ளாதது ஏன்?’ என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே “தேவை 6 கோடி டன்  தான் என்றால் 19 கோடி டன் கொள்முதல் ஏன்?” என்று அங்கலாய்த்து இருக்கிறார் ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே. ஒன்றிய உணவு கூட்டு றவு நிறுவனம் மற்றும் மாநில நுகர் பொருள் வாணிப கழகங்கள் மட்டும்  ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்?. தனி யார் கொள்முதல் செய்தால் என்ன தவறு?. இப்போது நடக்கும் கொள்முதலைவிட தனியார் கொள்முதல் செய்தால் குறைந்தபட்ச ஆதார விலையையும் குறைவாக கொடுக்கலாம். மேலும் அவர்கள் திறம்பட கொள்முதல் செய்வார்கள் என்றும், அடுத்த சீசன் முதல் கொள்முதலில் தனியாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் பாண்டே. உணவுப்பொருள் கொள்முதலில் தனியாரை ஈடுபட வைக்கும் ஒன்றிய பாஜக அரசின் துடிப்புதான் இது.

வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்யும்  போது குறைந்தபட்ச ஆதார விலை உறுதி யாக கிடைக்கும். அதே சமயம் தனியார் கொள்முதல் செய்தால் அவர்கள்  வைத்த விலைக்குதான் விளைபொருட் களை கொடுத்து விட்டு வரவேண்டும்.  தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒன்றிய அரசு கிட்டங்கிக்கு வழங்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டு குறுவைப் பரு வத்தில் 8.82 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில்  ஒன்றிய அரசு 6.73 லட்சம் டன் கொள் முதல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு 43.28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள் ளது. தமிழகத்தில் ஒன்றிய அரசு எந்த வித கொள்முதலும் செய்யவில்லை. நாடு முழுவதும் 2021-22-ல் குறுவைப் பருவத்தில் நெல், கோதுமை 1.30 கோடி விவசாயிகளிடம் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் 17.83 லட்சம் விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒட்டுமொத்த விவசாயி களிடமும் கொள்முதல் செய்யாமல், அவர்களைத் தனியாரிடம் தள்ளிவிடும் ஒன்றிய மோடி அரசின் தவறான கொள் முதல் கொள்கையினால் விவசாயிகள் வயிற்றில் அடி விழுகிறது.