states

ஆளுநர் வேலையை தவிர அனைத்து வேலைகளையும் செய்கிறார் ஆர்.என். ரவி

சென்னை.மே 4- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்ற ச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.  பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலா வதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள் கைக்கு பொருந்தாத ஒன்று என்று அவர்   தெரிவித்துள்ளார். மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயி ரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வர லாற்றை அழிக்கும் வகையில் பேசப்படு கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    

ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்ச ரான தங்கம் தென்னரசு பதில் அளித்து ள்ளார். அதில், “கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவ னில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்கிறார். அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவி க்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமை தியை சீர்குலைப்பதாக அமைந் துள்ளது என்பது தான் உண்மை.” “ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணி களையும் அவர் செய்து கொண்டி ருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச  வேண்டாம். எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங் களை பொதுவெளியில் பேசி வரு கிறார்.   “மாநில அரசு எழுதி அனுப்பி யதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க  வேண்டுமே தவிர, அவை மாண்பை  குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவி யல்ல. ஆளுநர் பதவியில் இருப்ப வர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்த னம் செய்யக்கூடாது.” என்று சாடி யுள்ளார்.