states

2023-இல் உலகளாவிய அளவில் வேலையின்மை அதிகரிக்கும்!

சர்வதேச தொழிலாளர் அமைப்பான  ஐஎல்ஓ எச்சரிக்கை

புதுதில்லி, ஜன. 18 - சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ (International Labour Organization - ILO), 2023- ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. வேலைவாய்ப்பின் வளர்ச்சி விகிதம் 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டில் அது 1 சதவிகிதம் குறையும் என்று கூறியுள்ளது.

2023-ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதத்தை, 1.5 சத விகிதம் என்று ஐஎல்ஓ முன்பு மதிப்பிட்டி ருந்தது. ஆனால் புதிய அறிக்கையில் அதனை 1 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. “உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்: போக்குகள்- 2023” (World Employment and Social Outlook: Trends 2023 (WESO Trends) என்ற அறிக்கையை, ஐஎல்ஓ திங்களன்று வெளியிட்டிருந்த நிலையில், அதில் இதுதொடர்பான புள்ளிவரங்கள் இடம்பெற்றுள்ளன. “ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், தற்போது ஒரு தொழிலாளியின் மொத்த வேலை நேரம், கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விடவும் குறை வாக இருக்கிறது. இந்நிலையில், உலக ளாவிய வேலையின்மை விகிதம் 2023-இல் மேலும் அதிகரிக்கும்.

2022-ஆம் ஆண்டில், உலகம் முழு வதும் சுமார் 47 கோடியே 30 லட்சம் பேர் வேலையில்லாதவர்களாக இருந்தனர். இவர்களில் உரிய தகுதி இருந்தும் வேலை கிடைக்கப் பெறாதவர்கள் 20 கோடியே 50 லட்சம் பேர் ஆவார்கள். மறுபுறத்தில், விரும்பியே வேலை தேடாதவர்கள் மற்றும் உரிய தகுதி இல்லாதவர்கள் 26 கோடியே 80 லட்சம் பேர். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டில் தகுதி இருந்தும் வேலை கிடைக்கப்பெறாதவர்களின் எண்ணிக்கையில் 30 லட்சம் அதிகரித்து, ஒட்டுமொத்தமாக வேலையற்றோரின் எண்ணிக்கை 20 கோடியே 80 லட்சமாக அதிகரிக்கும். தொழிலாளர் வேலைவாய்ப்புச் சந்தை சரிவுக்கு, அதிகரித்து வரும் புவி சார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உக்ரைன் மோதல்கள், சீரற்ற தொற்று நோய் மீட்பு மற்றும் உலகளாவிய விநி யோகச் சங்கிலிகளில் ஏற்பட்டு வரும்  தொடர்ச்சியான இடையூறுகள் முக்கியக் காரணமாகும். இந்த காரணிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, 1970- களுக்குப் பிறகு முதல் முறையாக - ஒரே நேரத்தில் பணவீக்க அதிகரிப்பு மற்றும் குறைந்த வளர்ச்சி - தேக்க நிலைக்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.

தற்போதைய உலகளாவிய பொருளா தார மந்தநிலையானது (Global Economic Slowdown), வேலையின்மை, வறுமை போன்ற சமூக மற்றும் பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும். தொழிலாளர்கள் மதிப்புக் குறைந்த மற்றும் குறைந்த ஊதியத்திலான- அதே நேரத்தில் அதிக நேரத்திற்கு, பணிப்பாது காப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாத வேலைகளை ஏற்க வேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்படுவர்.  தொழிலாளர் பெறும் ஊதிய வரு வாயை விடவும், விலைவாசி வேகமாக உயரும் போது, ​​வாழ்க்கைச் செலவுக் கான நெருக்கடி, உலகில் அதிகமான மக்க ளை வறுமையில் தள்ளும் அபாயம் உள்ளது. 

ஆண் - பெண் தொழிலாளர் பங்கேற் பிலும் தொடர்ந்து இடைவெளிநிலவுகிறது. 2022-இல் “உலகளவில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 47.4  சதவிகிதமாக இருந்தது. ஆண் தொழி லாளர் பங்கேற்பு விகிதமான 73.3 சத விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 24.9 சதவிகிதம் குறைவாகும். சமூகத்தில் பொருளாதார ரீதியாக செயலற்ற ஆண் - பெண் விகிதமானது, 1:2 என்ற அளவில் உள்ளது. 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் கண்ணியமான வேலை வாய்ப்பைக் கண்டுபிடித்து வைத்திருப்ப தில் கடுமையான சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இந்த வயதிலான இளைஞர்களின் வேலையின்மை விகி தம், பெரியவர்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், இவர்களில் ஐந்தில் ஒருவருக்கு- அதா வது, 23.5 சதவிகிதம் இளைஞர்கள்- வேலைவாய்ப்புக்கான கல்வி அல்லது பயிற்சி பெற்றவர்களாக இல்லை.  வரும் ஆண்டுகளில் முறைசாரா வேலைகளின் நிலைமையும் தலைகீழாக  மாறக்கூடும்.

இந்த அறிக்கை குறித்து பேசி யிருக்கும் ஐஎல்ஓ ஆராய்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பாளரும் அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டிருப்பவருமான ரிச்சர்ட் சம்மன்ஸ், “கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பு 2025-க்கு முன் தலைகீழாக மாறிவிடும் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். “உலகளாவிய மந்தநிலை மற்றும் உலகளாவிய வேலையின்மை விகிதம் ஆகியவற்றின் மதிப்பீடுகள் இதைத் தெளி வாகச் சுட்டிக்காட்டுவதாகவும், இதில், உற்பத்தி வளர்ச்சியின் மந்த நிலை குறிப்பிடத்தக்கது; வாங்கும் திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றில் நாம் எதிர் கொள்ளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு உற்பத்தித்திறன் இன்றியமையாதது” என்றும் சம்மன்ஸ் கூறியுள்ளார்.

“மிகவும் கண்ணியமான வேலை  மற்றும் சமூக நீதிக்கான தேவை தெளி வானது மற்றும் தற்போது மிகவும் அவசர மானது. ஆனால் இந்த சவால்களை நாம் சந்திக்க வேண்டுமானால், ஒரு புதிய உலகளாவிய சமூக ஒப்பந்தத்தை உரு வாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று ஐஎல்ஓ இயக்குநர் ஜெனரல் கில்பெர்ட் எப் ஹங்போ வலி யுறுத்தியுள்ளார். “இந்த உலகளாவிய புதிய மந்த நிலைக் கட்டத்தில், சமூக நீதிக்கான உலக ளாவிய கூட்டணியை உருவாக்கவும், தேவையான கொள்கைகளை உருவாக்க வும் ஐஎல்ஓ பிரச்சாரம் செய்யும்” என்றும் கில்பெர்ட் எப் ஹங்போ உறுதி யளித்துள்ளார்.